உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இசையமுது 1, 1984.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

இசையமுது

உழத்தி

ளை யெடுக்கின்றாள்— அதோ
கட்டழகுடையாள் சிற்றிடையாள்— அதோ
களை யெடுக்கின்றாள்!

வளவயல்தனில் மங்கைமாருடன்
இளங் கரும்பிடைச் செங்கரும்பு போல்
களை யெடுக்கின்றாள்!


கவிழ்ந்த  தாமரை
முகம்  திரும்புமா?—அந்தக்
கவிதை  ஓவியம்
எனை  விரும்புமா?

                           
அவிழ்ந்து வீழ்ந்த கருங்கூந்தலாம்
அருவிநீரில் எப்போது முழுகலாம்?— களை


"செந்நெல்  காப்பது
பொதுப்பணி  செய்யல்!—ஆம்"
என்ற  நினைவினால்
என்னருந்  தையல்,

                        
மின்னுடல் வளைய வளையல்கள் பாட
விரைவில் செங்காந்தள் விரல்வாட— களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/9&oldid=1646153" இலிருந்து மீள்விக்கப்பட்டது