இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8
இசையமுது
உழத்தி
களை யெடுக்கின்றாள்— அதோ
கட்டழகுடையாள் சிற்றிடையாள்— அதோ
களை யெடுக்கின்றாள்!
வளவயல்தனில் மங்கைமாருடன்
இளங் கரும்பிடைச் செங்கரும்பு போல்
களை யெடுக்கின்றாள்!
கவிழ்ந்த | | தாமரை |
முகம் | | திரும்புமா?—அந்தக் |
கவிதை | | ஓவியம் |
எனை | | விரும்புமா? |
அவிழ்ந்து வீழ்ந்த கருங்கூந்தலாம்
அருவிநீரில் எப்போது முழுகலாம்?—
களை
"செந்நெல் | | காப்பது |
பொதுப்பணி | | செய்யல்!—ஆம்" |
என்ற | | நினைவினால் |
என்னருந் | | தையல், |
மின்னுடல் வளைய வளையல்கள் பாட
விரைவில் செங்காந்தள் விரல்வாட—
களை