இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காதல் பகுதி
7
உழவன் பாட்டு
சென்று பொழுதுசாய—வரு
கின்றேனடி விரைவாக!
இன்று தவறினால் ஈரம் போகுமடி
இருட்டிப் போகுமுன் விதைக்கலாகுமடி—
சென்று
வேலி முள்சுமந்த கூலிகொடடி
ஆள் வந்தால்—நீ
வேளை ஆகுமுன் கொண்டுவா
கூழிருந்தால்!
வேலைக்காகப் பகல் போதில்
உன்னைப் பிரிந்தால்
விடியுமட்டும் யார் கேட்பர்
காதல் புரிந்தால்—
சென்று
சேவல் குரல்கிழியக் கூவல்
கேளடி கரும்பு!—நின்
ஆவல் தெரியுமடி போக
விடைகொடு! திரும்பு!
தேவையிருக்கையில் உன்றன்
நெஞ்சோ இரும்பு!
சிவலைப் பசுவுக்கோ தீனி
வைக்க விரும்பு—
சென்று