இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காதல் பகுதி உழவன் பாட்டு சென்று பொழுது சாய வரு கின்றேனடி விரைவாக இன்று தவறினால் ஈரம் போகுமடி இருட்டிப் போகுமுன் விதைக்கலாகுமடி - வேலி முள்சுமந்த கூலிகொட்டி ஆள் வந்தால் -நீ வேளை ஆகுமுன் கொண்டு வா கூழிருந்தால்! வேலைக்காகப் பகல் போதில் உன்னைப் பிரிந்தால் விடியுமட்டும் யார் கேட்பர் காதல் புரிந்தால் - சேவல் குரல் கிழியக் கூவல் கேளடி கரும்பு !-நின் ஆவல் தெரியுமடி போக விடை கொடு! திரும்பு! தேவை யிருக்கையில் உன்றன் நெஞ்சோ இரும்பு! சிவலைப் பசுவுக்கோ தீனி வைக்க விரும்பு 7 சென்று சென்று சென்று