பக்கம்:இசையமுது 1, 1984.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. பெண்கள் பகுதி பெற்றோர் ஆவல் துள்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?-எமக் கின்பம் சேர்க்க மாட்டாயா?-- நல் லன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ அல்லல் நீக்க மாட்டாயா?-கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா? வன்பும் எளிமையும் சூழும். நாட்டிலே வாழ்வின் உணர்வு சேர்க்க-எம் வாழ்வின் உணர்வு சேர்க்க-நீ அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா?-கண்ணே ஆடிக் காட்ட மாட்டாயா? அறமி தென்றும் யாம் மறமி தென்றுமே அறிகி லாத போது-யாம் அறிகி லாத போது தமிழ் இறைவ னாரின் திருக்குறனிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா?-நீ இயம்பிக் காட்ட மாட்டாயா? புறம்இ தென்றும் தல் லகம்இ தென்றுமே புலவர் கண்ட நூலின் - தமிழ்ப் புலவர் கண்ட நூலின்-நல் திறமை காட்டிஉனை ஈன்ற எம்உயிர்ச் செல்வம் ஆகமாட்டாயா?--தமிழ்ச் செல்வம் ஆகமாட்டாயா? இசையமுது (துள்) (துன்) (துன்) (துள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/49&oldid=1443360" இலிருந்து மீள்விக்கப்பட்டது