பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— எ —


சூழ்ச்சியும் அரக்கமும் அதிகாரச் சூழலும்
வீழ்ச்சி யுறுக! நின்னுடல் வெடித்துச்
சுக்குநூ றாகச் சிதறுக! சூதனே!
திக்கிநா விழுக்க! நெஞ்சு தெறிக்க!

எந்தமிழ் இளையரும் ஏழைப் பெண்டிரும்
நொந்துயிர் துடிக்கையில் உளக்குலை நொய்ந்தே
இட்ட சாவங்கள் இணைந்து கூடி
முட்டுக நின்னுயிர்! மூளி, நீ யாகுக!

தமிழினம் தகைக்கும் தருக்கனே! நின்குடி
அமிழுக! ஆங்கோர் அணுவின்றி அழிக!
தணலும்எம் நெஞ்சின் தவிப்பை
மணல்,நீர், தீ, வளி, வானம் — ஆற் றுகவே!

— சுவடி : 24; ஓலை : 3. மார்ச்சு — ஏப். 1988