46
கூறியுள்ளார். கட்டுரையின் போக்கையுணர்த்த ஒரு சில பகுதிகளே போதுமானது.
பின்னர், கட்டுரையாளர் சமூக நீதிக்காக பேராட்டம் பற்றிப் பேசப் புகுந்து, 'வகுப்புவாதி' என்ற சொல்வகுப்பு நீதிக்காகப் பாடு படுவோரைத் தூற்றும் வகையிலேயே உபயோகிக்கப்படுகிறதெனக் கூறுகிறார். ஹிந்து சமுதாயத்தில் பெரு வாரியான மக்கள் பிராமணரல்லாதாரேயென்றும், பிராமணர் சிறு பான்மையினரேயென்றும் குறிப்பிட்டு, ஆனால் அப்பெருவாரி மக்களே௸சிறுபான்மையானவரை உயர் ஜாதிக்காரர்களாக நினைந்தொழுகி வருகிறார்களென்றும் கட்டுரையாளர் நடப்பை எடுத்துக் காட்டுகிறார். சாஸ்திர சம்பிரதாய பழக்க வழக்கங்களை யொட்டியே இந்நிலை நீடித்து வருகிறதென்றும் இதன் காரணமாகவே பெருவாரியான மக்கள் கல்வி—தொழில்—பொருளில்—அரசியல்—மதியல இன்ன பிறதுறைகளில் உரிய அளவு வாய்ப்பு வசதிகள் கிடைக்கப் பெறாதவராய் நிற்க, சிறுபான்மை வகுப்பினராகிய பிராமணர்கள் அனைத்து துறைகளில் பெருத்த அளவுக்கு முன்னேற்றங்கண்டுள்ளனரெனக் கட்டுரையாளர் மேலும் கூறுகிறார். சமூகநீதிக் கோரிக்கையை முற்ற விட்டால் தங்கள் ஆதிக்கத்துக்கு ஆபத்து வந்துகிட்டுமென்றுணர்ந்த பிராமணர்கள் நீதி