பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் சிரித்துக் கொண்டே, அவர் நெடுநேரம் காத்திருந்து விட்டுப் பிறகு சென்றால், விருந்தின்போது அவருக்கு உட்கார் வதற்கு எந்த ஆசனமும் கிடைக்காது போகலாமே என்று அவரிடம் சொன்னேன், ' நான் அப்படி ஏமாறுகிற ஆசாமி: அல்ல என்று அவர் தமது தலையை உறுதியோடு அசைத்தவாறே கூறினார்: நான் எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் 'வரு கிறேன். நான் ஒரு சரியான , ஊசலாடும் மத்தியதர விவசாயி என்று கண்டு கொண்டதும், கூட்டுப் பண்ணையில் சேருமாறு எனக்கு அழைப்பு வந்திருக்கத்தான் - செய்கிறது, என்னிடம். இருப்பதெல்லாம் ஒரு ஜோடிக் குதிரைகளும் ஒரு சாதாரணக் கிழட்டுப் பசுவும் தான், ஆயினும், அவர்கள் என்னை அந்தக் கூட்டங்களுக்குக் கூப்பிட்டுக்கொண்டே இருப்பதால், நான் இன்னும் கொஞ்சம் ஊசலாடத்தான் , செய்வேன். இந்தக் கூட்டுப் பண்ணையை நான் உண்மையிலேயே நன்றாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தலைகால் தெரியாத வேகத்தில். அதில் போய்ச் சேர்வது என்பது ... அதை எப்படிக் கூறுவதென்றே எனக்குத் தெரியவில்லை... .. , "ஏன்? பயமா? என்று கேட்டேன் நான்.

"இல்லையில்லை, நான் ஒன்றும் எளிதில் பயந்து விட மாட்டேன். என்றாலும் நான் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள விரும்புகிறேன். ஏதாவது பாதகமாகி விட்டால்? நீங்கள் இதை எனக்குச் சொல்லுங்கள்: எது பாதுகாப்பானது? கூட்டுப் பண்ணை . விவசாயியாக மாறுவதா? அல்லது தனிப்பட்ட விவசாயி யாக இருப்பதா? எத்தகைய வாழ்க்கையை நான் விலக்கி வைக்க வேண்டும்? பாருங்கள், தவறு செய்துவிடக் கூடாதே என்றுதான் நான் பயப்படுகிறேன். நான். இளைஞனாக இருந்த காலத்தில், எனக்கு எவ்வளவோ அதிர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. நாம் ஒரு புறத்திலிருந்து தொல்லையை எதிர்பார்த்துக் கொண் டிருக்கலாம், ஆனால் அது மறுபுறத்திலிருந்து நம்மை வந்து தாக்கும் என்பதை, நான் அறிவேன்; அதிருஷ்டம் இருந்தால் தான் பிழைத்தோம். உதாரணத்துக்கு உங்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன், - சுமார் , முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், காலஞ்சென்ற எனது பெற்றோர்கள் . எனக்கு மணம் முடிக்க, மற்றொரு பண்ணை வீட்டில் ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். அவளைப் பார்த்துவிட்டு வருவதற்காக நாங்கள் சென்றோம்: நான் தைரியசாலியாகத்தான் இருந்தேன். என்றாலும், அவளை முதன் முதலாக நான் பார்த்தபோது, என்., இருதயமே,

துடிக்காது நின்று விட்டது;. மறுகணம். அது என் தொண்டையில்:

149