பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டியிருந்தது ; ஏனெனில் டிராக்டர்களில் ஒன்று பழுதடைந்து விட்டது. பொழுது விடிவதற்குள் அவரை மேலும் மூன்று முறை எழுப்பி விட்டார்கள், பாவம், என்னைப்போலவே நிம்மதியில்லாமல் புரண்டு புரண்டே தூங்கிய எங்களது டிரைவர் காலையில் எழுந்ததும் அந்த வீட்டுக்காரரை நோக்கி, அழுதுவடியும் பெருமூச்சோடு இவ்வாறு கூறினார்: "சே! என்ன வாழ்க்கை இது! இங்கே தூங்குவது என்பது பாண்டு வாத்தியங்கள் கொட்டி முழக்கிக் கொண்டிருக்கும் ஒரு மன்றத்தில் தூங்குவது போலத்தான்.' '. “ஆமாம், இங்கு எங்களுக்கு அமைதியோ நிம்மதியோ கிடையாது என்று அதற்குள்ளாகவே முழுமையான உடை தரித்து முடித்துவிட்ட வீட்டுக்காரர் களைப்பு மிகுந்த புன்னகை யோடு பதில் கூறினார்: * * இது ஒரு பெரிய பண்ணை : இங்கு செய்ய வேண்டிய வேலைகள் ஏராளமாக உள்ளன; எனவே நாங்கள் இரவுகளையும் கூடப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது இப்போது நீங்கள் மீண்டும் தூங்கப் போகலாம். இனி யாரும் "உங்களுக்குத் தொல்லை தர மாட்டார்கள். நான் புறப்படுகிறேன்; இன்னும் அரைமணி நேரத்தில் பண்ணையின் நிர்வாகக் குழுக் கூட்ட ம் கூடுகிறது. நான் என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன்; மணி நாலரை ஆகியிருந்தது. அதிகாலை ஐந்து மணிக்கு யார் கூட்டத்தை நடத்துவார் கள்? என்று எங்கள் டிரைவர் சிரித்துக்கொண்டே கேட்டார்.

    • இது ஒன்றும் வே 24.க்கையான விஷயமல்ல, மகனே! ஏன்

" என்றால், பகல் நேரத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஒன்று கூடுவதே சிரமம்: ஒருவர் தானியத்தைட்! .!?ரம் ஏற்றிக் கொண்டிருப்பார்; இன்னொருவர் வயலுக்குச் சென் றிருப்பார்; மூன்றாமவரோ ஏதாவது உதிரிப் பாகங்களை வாங்கி வருவதற்காக ஸ்டாலின் கிராடுக்குப் புறப்பட்டுப் போயிருப்பார், நானும் கூட, பொழுது விடிவதற்கு முன்பே வயலுக்குச் சென்று விடுவேன். எனவே தான் நாங்கள் கூட்டத்தை அதிகாலையிலேயே நடத்தி, விஷயங்களை விரைவில் முடிவு செய்யத் தீர்மானித் தோம். நாங்கள் எல்லோரும் ஒரே விஷயத்துக்காகவே பாடு {பட்டு வருகிறோம்! எங்களால் முடிந்த வரையில் வெகு சீக் கிரத்தில் இந்தப் பண்ணையை மீண்டும் மேம்படுத்திவிட. வேண்டும் என்பதுதான் அந்த விஷயம். இது ஏனைய பண்ணை களைக் காட்டிலும் வளம் குறைந்த பண்ணையாக இருக்க

நாங்கள் விரும்பவில்லை.

175