பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்று , கோ ழி "இந்தச் சிறு பற்றி களே என்பதையும் நான் கூறியாக வேண்டும். அவர்களது மனச்சாட்சியில் இடம் பெற்றுள்ள வேறு சில விஷயங்களும் உண்டு. என்றாலும், அதற்கு அவர்களது இளமைப் பருவமே காரணம் என்று நாம் கொள்வோம்; அதனை அவர்களுக்கு எதிராக நாம் இப்போது பயன்படுத்தாது இருப்போம்; ஆண்டுகள் செல்லச் செல்ல அவர்களை நாம் மேலும் மேலும் வழிக்குக் கொண்டு வருவோம். இளம் எழுத்தாளர்களைப் பற்றிக் ' கூறப் புகுந்தால், அவர்கள் நமது இடத்தில் இடம் பெறப் போகும் அற்புதமான புதிய படையினரே ஆவர், இதையொன்றும் நான் உள்ளடங்கிப் போன குரலில் ரகசியமாகக் கூற வேண்டியதில்லை. மிகவும் மகிழ்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், இளம் திறமை யாளர்கள் பலர் . ஏராளமான எண்ணிக்கையில் தோன்றி வருகிறார்கள் என்பதுதான்--அவர்கள் இப்போதுதான் ஆண் மைக் குரலைப்பெற்று வரும் சிறுவர்களாக உள்ளனர்; எனவே அவர்கள் இளம் சேவற்' . கோழியைப்போல் அடிக்கடி கீச்சுக் குரலை எழுப்புவது சகஜம்தான், இந்தச் சிறுவர்கள்தான் நமது உண்மையான செல்வமாவர்; இவர்களைப் பற்றிப் பரவச் உணர்ச்சியும் நியாயமான பெருமிதமும் இல்லாமல் , நாம் பேசவே முடியாது. நமது நாட்டின் வளமிக்க மண், இத்தகைய. திறமையாளர்களை மிகவும் தாராளமாக வழங்கி வருகிறது. என்பது அற்புதமானதுதான்; உண்மையிலேயே. அற்புதமானது தான்! ஆயினும் இது விஷயத்திலும் சிந்தனைக்கு இடமுண்டு; இதிலும் வருங்காலத்தைச் சற்று உற்று நோக்குவதே நன்மை பயக்கும், தீவிரமான சிந்தனையைத் தூண்டும் சில புள்ளி விவரங்களை மேற்கோள் காட்ட நான் விரும்புகிறேன். முதலா வது - எழுத்தாளர் காங்கிரசில், பிரதிநிதிகளில் 71 சதவீதம் பேர் நாற்பது வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தனர்; இரண்டாவது காங்கிரசில் இந்தச் சதவீதம் 20.6 ஆகக் குறைந்தது; மூன்றாவதில் 13, 6 - சதவீதமாகக் குறைந்தது. இப்போதைய காங்கிரசில் இந்த வீதாசாரம் 1 2.2 சதவீதமாகவே உள்ளது. எனது சோதர எழுத்தாளர்களே, நாம் முதுமையடைந்து வருகிறோம், காங்கிரசுகளது பணிகளுக் குள்ளும், எழுத்தாளர் யூனியன்கள் மற்றும் அதன் பகுதிகள் ஆகியவற்றின் நிர்வாக உறுப்புக்களுக்குள்ளும் இளம் எழுத் தாளர்களை மிகவும் துணிச்சலோடு ஈர்த்துக் கொள்வதற்கான தருணம் நிச்சயம் வந்து விட்டது. இப்போதுள்ள நிலைமையைப் பார்த்தால், நமது முறையானது, பதவி உயர்வு மிகமிக மெது