பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

129



கோபால கிருஷ்ணன் கோகலே ‘சுதாரக்’ (Sudharak) என்று ஆங்கிலத்திலும், மராத்தியிலும் பத்திரிகைகளை நடத்தி தேசியப் பிரச்சனைகளை மக்களுக்கு உணர்த்தினார்.

இந்திய தேசியக் காங்கிரஸ் பேரவையில் 1907-ஆம் ஆண்டில் பெரும் பிளவு ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் மிதவாத அணியிலே கோகலே இருந்தார். உடனே தனது தொண்டர்களோடு ‘தக்காண சபை’ (Deccan Sabha) என்ற ஓர் அமைப்பை நிறுவினர். இந்திய ஊழியர் சங்கம் என்பதை அமைத்தார். இந்த சங்கம் சார்பாக ‘தியான் பிரகாஷ்’ (Dhyan Prakash) என்ற பத்திரிகையை நடத்தினார். பத்திரிகைச் சுதந்திரத்திற்கு இந்த இதழ் கடுமையாகப் போரிட்டது.

பிரிட்டிஷ் ஆட்சி

அடக்கு முறைகள்

பிரிட்டிஷ் அரசு, செய்தித் தாள் சட்டம் என்ற ஒரு சட்டத்தை 1908-ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இதை குற்றங்களுக்குத் துண்டிவிடும் சட்டம் - VII என்று; அதாவது (The News Papers (Incitement to Offences Act VII ) என்று அரசு குறிப்பிட்டது.

எந்தப் பத்திரிகை ஆசிரியர் கலகங்களைத் தூண்டிவிடும் வகையில் செய்திகளை எழுதுகின்றாரோ, அவர்மீது நடவடிக்கை எடுத்திட, உள்ளூர் அதிகாரிகளுக்கு இது அனுமதியளிக்கும் சட்டமாகும். இந்தச் சட்டத்தின்படி பத்திரிகைகள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அதில் ஏழு பத்திரிகைகளை அரசு கைப்பற்றியது.

மிண்டோ - மார்லி சீர்திருத்தங்கள் என்ற சட்ட நடவடிக்கைகள் பெயரால், பத்திரிகைகளை அடக்க அரசுக்கு அதிகாரம் அளித்தது. இந்தச் சட்டத்தை மதன்மோகன் மாளவியா, பூபேந்திர நாத்பாசு, பிரோஷ்ஷா மேத்தா ஆகியோர் நாடாளுமன்றத்தில் வன்மையாகக் கண்டித்தார்கள்.

‘இந்திய இதழ்கள் சட்டம்’ என்றொரு சட்டம் 1910-ஆம் ஆண்டு அரசினரால் கொண்டு வரப்பட்டு, அதன் வாயிலாகப்