இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7
- ‘இனப் பெயர் ஏன் என்று பிறன் எனைக் கேட்டால்
- மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்
- ‘நான்தான் திராவிடன்’ என்று நவில்கையில்
- தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!
- ‘முன்னாள்’ எனும் பன்னெடுங் காலத்தின்
- உச்சியில் ‘திராவிடன்’ ஒளி செய்கின்றான்
- அன்னோன் கால்வழி யாகிய தொடர் கயிற்று
- மறுமுனை நான்!என் வாழ்வின் கால்வழி
- யாகிய பொன்னிழை அளக்க ஒண்ணா
- எதிர்கால லத்தின் கடைசியோ டியைந்தது.
- சீர்த்தியால், அறத்தால், செழுமையால் வையப்
- போர்த்தி றத்தால் இயற்கை புனைந்த
- ஓருயிர் நான்!என் உயிர்இனம் திராவிடம்!
- ஆரியன் அல்லேன் என்னும் போதில்
- எத்தனை மகிழ்ச்சி! எத்தனை மகிழ்ச்சி!
- விரிந்த வரலாற்றுப் பெருமரம் கொண்ட
- “திராவிடன்” ஆலின் சிறிய வித்தே!
- இந்நாள் வாழ்வுக் கினிதினி தாகிய
- பொன்னேர்-கருத்துக்கள் பொதிந்துள அதனில்!
- உன்இனப் பெயர்தான் என்ன என்று
- கேட்கக் கேட்க அதனால் எனக்கு
- மீட்டும் மீட்டும் இன்பம் விளைவதாம்”