பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

ஆறு நாடுகளின் உருவாக்கமே நமது குடியரசு சட்ட அமைப்பு



பொதுமக்களுக்குச் செய்தியாகக் கூற வேண்டிய கையெழுத்துப் படிவங்களை வைத்திருப்போர், என்னைக் காலை 10 மணியிலிருந்து 12 மணிக்குள் எனது அறையில் சந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்....” என்றார் வில்லியம் போல்ட்ஸ்.

இவ்வாறு போல்ட்ஸ் அறிவித்தார் என்ற காரணத்துக்காக ஆங்கிலேயர் ஆட்சி அவரைத் தனது தாய் நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிட்டது.

இந்தியப் பத்திரிகைத் தடைச் சட்டம் இதழைத் துவங்குவதற்கு முன்பே அவரது செயற்கருவை அழித்து விட்டது.

போல்ட்சைப் போலவே, ஜேம்ஸ் அகஸ்டல் ஹிக்கி என்பவர் 1780-ஆம் ஆண்டில் ‘பெங்கால் கெசட்’ என்ற, இதழைத் துவக்கி, தலைமை ஆளுநர் வாரன்ஹேஸ்டிங்சாலும், அவரது மனைவியாலும், பெருந்துன்பத்திற்கு ஆளானார். காரணம், “கிழக்கு இந்தியக் கம்பெனி செய்திருந்த ஊழல்களை அம்பலப்படுத்துவேன்” என்று அவர் பகிரங்கமாகக் கூறியதற்காக. அதன் விவரம் வேறோரிடத்தில் உள்ளது படிக்கவும்.


2. தலைமை ஆளுநர் வெல்லெஸ்லி பிரபு
1799-ல் வெளியிட்ட ஐந்தம்ச சட்டம்!

வாரன்ஹேஸ்டிங்சும், அவரது துணைவியாருடைய ஊழல்களும் அம்பலப்படுத்தப்பட இருப்பதை அறிந்து, அவருக்குப் பிறகு ஆங்கிலேயர் ஆட்சி நிர்வாகத்திற்குத் தலைமை ஆளுநராகப் பதவி ஏற்ற டல்ஹெளசி பிரபு, செய்திப் பத்திரிகைகள் வளர்ச்சிகளை அடக்கிட, பழிவாங்கும் உள்நோக்கத்தோடு, ஐந்து அம்சத் திட்டம் ஒன்றை கி.பி. 1799-ஆம் ஆண்டு கொண்டு வந்தார். விவரம் வருமாறு :

1. செய்தித் தாட்களை அச்சிடுவோர் முகவரி, பெயர் இதழில் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும்