புலவர் என்.வி. கலைமணி
229
10
|
பத்திரிகை வளர்ச்சிகளை அழிக்கும்
அடக்குமுறைச் சட்டங்கள்!
வாள்முனையின் வலிமையைவிட பேனா முனையின் சக்தி பலம் வாய்ந்தது’ என்றான். பிரெஞ்சு நாட்டின் எழுத்துலகச் சிற்பியான வால்டேர்! என்ன காரணம் அதற்கு?
ஒரு பேரரசை, ஏகாதிபத்திய ஆட்சியைப் பேனா முனையில் அழிக்கவும் முடியும்; ஆக்கவும் முடியும். எழுதுகோல் சிந்தனையால் கவிழ்க்கவும் இயலும்; காக்கவும் முடியும்’ என்றான் சமயப் பற்றற்ற அந்தச் சான்றோன்.
அதனால்தான் அரசியல் சட்டத்தை மக்களாட்சிக்காக வகுத்த வித்தகம், அரசியல் சட்டம், நாடாளுமன்றம்; நீதிமன்றம் என்ற முப்பெரும் சக்திக்கும் மேலாக - நான்காவதாகப் பத்திரிகைப் பலத்தை அரணாக அமைத்தது.
எனவே, ஓர் அரசு நிலையாகச் செயல்பட வேண்டுமானால் பத்திரிகைகள் அவற்றின் உரிமைகளோடு சுதந்திரமாகச் செயல்படவேண்டும் என்று எண்ணினர் அரசியல் மேதைகள்.
அவை அவ்வாறு செயல்படாமற்போனால், ஆட்சிக்கு அடிமைகளாக இயங்கினால், எந்த மக்களாட்சியாலும்