பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

பத்திரிகை நடத்துவது எப்படி?



பதிவு செய்யும்
வழிகள் சில!

எந்த வ்கையான பத்திரிகைகளைத் துவங்க நினைத்தாலும், அவற்றைத் துவங்குவதற்கு முன்பு பத்திரிகைப் பெயர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த ‘பத்திரிகைப் பெயரை, சென்னை நகராக இருந்தால் பெருநகர நீதிபதியிட மனு செய்து (Metropolitan Magistrate), மாவட்டமாக இருந்தால் மாவட்ட நீதிபதியிடமும் (District Magistrate), வட்டமாக இருந்தால் வட்டத் துணை நீதிபதியிடமும் (Sub-divisional Magistrate) பதிவு செய்து பத்திரிகைக்குரிய டெக்ளரேஷன் (Declaration) என்ற உரிமையை பெற வேண்டும்.

எந்த ஊரில் பத்திரிகையை நடத்த விரும்புகிறோமோ அந்தந்த இடத்திலுள்ள நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளிடம் இதழ் நடத்துபவர் மனு விண்ணப்பிக்க வேண்டும்.

காவல் துறையிடம் மனு விண்ணப்பிக்காமல் நீதித் துறைக்கு ஏன் போக வேண்டும் என்று கேட்பீர்கள் அல்லவா? காவல் துறைக்கும் - பத்திரிகைத் துறைக்கும் எந்தவித ஒட்டுறவும் கிடையாது. ஜனநாயக நாட்டில் பத்திரிகைத் துறை நான்காவது தூண்! அதைத் தட்டிக் கேட்கும் அதிகாரம் மக்களாட்சிக் கோட்டையின் மூன்றாவது தூணான நீதிமன்றத் தூணுக்குத்தான் அந்த அதிகார பலம் உண்டு. அதனால்தான் பத்திரிகை நடத்துவோர் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்பது இதழியல் இன மரபு ஆகும்.

விண்ணப்பிக்கும் மனுவில் பத்திரிகை வெளியிடும் இட்ம் முகவரி, பெயர், எந்த மொழியில் அது நடத்த இருக்கிறது? எந்த நாட்களில் அந்தப் பத்திரிகை வெளிவருகிறது? அச்சகம் பெயர், முகவரி, நாளேடா, வாரமா, மாதமா என்று இதழ் வெளிவரும் கால அளவு போன்ற பத்திரிகை விவரங்களைக் குறிப்பிட்டு, நீதிபதி முன்பு கையொப்பமிட்டு அந்த மனுவைக் கொடுக்க வேண்டும்.