பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

283



அவதானம் என்றால் என்ன என்பதை மேலே விளக்கியுள்ளோம்! அதற்கேற்ப, எண்ணிக்கைக்குரியவாறு அவரவர் திறமைகளை அவதானப் பயிற்சிப் பெற்றோருக்கு அவை நன்கு தெரியும். ‘சதாவதானி’ செய்குத் தம்பி பாவலர், ‘அட்டவதானி’ பூவை கலியான சுந்தர முதலியார் போன்ற சிலர் அதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார்கள்.

செய்தியாளர்கள் செய்யும் தசாவதான இயல்பு வகைகள் எவை? அவர்கள் யார் யார் என்பதைப் பார்ப்போம்!

1. தலைநகரச் செய்தியாளர்கள்

செய்திப் பத்திரிகைகள் பெரும்பாலும் முக்கியமான நகரங்களிலே இருந்து வெளிவந்தால்தான் அவற்றுக்குச் செய்திகள் திரட்டிட வசதிகளாக இருக்கும். அந்தந்த நகரங்களிலே உள்ளூர் செய்திகளைத் திரட்டுபவர்கள் City Reporters என்ற நகர செய்தியாளர்கள் ஆவர்.

இவர்கள் அன்றாடம் அந்த நகரப் பகுதிகளிலே நடைபெறும் நன்மை தீமைகளைத் தரும் செய்திகளைச் சேகரித்துத் தங்களது தொடர்பான பத்திரிகைகளுக்கு வழங்கப் பணிபுரிவார்கள்.

2. ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகர்ப் பகுதிகளிலிருந்து செய்திகளைச் சேகரிப்பவர்களுக்கு நகர்ப்புறச் செய்தியாளர்கள் (Mofussil Reporters) என்று பெயர்.

3. தேசியச் செய்தியாளர்கள்

இவர்கள் திரட்டும் செய்திகள் அகில இந்திய வளர்ச்சி நிலைமைகளுக்குத் தக்கவாறு அமைய வேண்டும். அதனால் அவர்கள் தேசிய நிருபர்கள் எனப்படுவார்கள்.

4. வெளிநாட்டுச் செய்தியாளர்கள்

உலக நாடுகளின் தலைநகரங்களில் வாழ்ந்து கொண்டு அங்குள்ள உலகச் செய்திகளை தத்தங்களது நாடுகளுக்கு அறிவிக்கும் செய்தியாளர்களாவர்.

5. பகுதிநேரச் செய்தியாளர்கள்

பத்திரிகை அலுவலகத்தில் நேரடியாக வேலை செய்யாமல், தங்களது வாழ்க்கைக்குரிய நிரந்தரப் பணிகளை