புலவர் என்.வி. கலைமணி
381
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவதெங்குங் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழர்எனக் கொண்டிங்கு வாழ்தல்
நன்றோ சொல்வீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்”
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல்
இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை உண்மை
வெறும் புகழ்ச்சி யில்லை
ஊமையராய்ச் செவிடர்களாய் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒருசொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கஞ் செழிக்கச் செய்வீர்”
“தமிழ் எதற்கு? தமிழில் அறிவு நூல்களை ஆக்க முடியாது. அவற்றிற்குரிய தமிழ் சொற்களில்லை. தமிழால் அச்சொற்களைக் கூறவும் முடியாது. விரைவில் தமிழ் சாகும்; சாகவும் வேண்டும்” என்று வெளியில் சொல்ல வெட்கப்பட்டு உள்ளத்தில் தமிழை அழிக்க வகை தேடித் திரியும் தீயோரை என்னென்பேன்! என்று அடிகளாரிடம் பேசி, தமிழுணர்ச்சி வீறு கொண்டார் பாவலர்.
தமிழ்த் தாய் தன் மக்களை நோக்கிப் புலம்புவதாகப் பாடினேன். இது ‘தமிழ்த் தாய் புலம்பல்’ என்ற பாடலைப் பாரதியார் படித்துக் காட்டியது. இது.
“இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன் எனதாருயிர் மக்காள்
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்குக்
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்