பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

83



ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் போது, பத்திரிகைகளை இங்கிலாந்து நாட்டிலேயே அச்சடித்துக் கப்பலில் கொண்டு வந்தார்கள். பற்றாக்குறையால் அதிகாரிகள் பலருக்கு அந்தப் பத்திரிகைகள் கிடைப்பதில்லை. பிறகு எப்படி பொது மக்கள் படிக்கக் கிடைக்கும்?

எனவே, கிழக்கு இந்திய நிறுவனத்தில் பணியாற்றிய சிலர், தங்கள் வேலைகளை விட்டு விலகி, தங்களது குறைகளை எடுத்துக் காட்டிட, ஒரு பத்திரிகையைத் துவங்கத் திட்டமிட்டார்கள். அவர்கள் பத்திரிகைகளை ஆரம்பித்தால் அதனால் கம்பெனியின் ஊழல்கள் மக்களுக்கும், பிற அதிகாரிகளுக்கும் தெரிந்து அவமானம் ஏற்படுமே என்ற எண்ணத்தால், பத்திரிகையை வெளியே வரமுடியாமல் தடுத்து நிறுத்தும் குறுக்கு வழிகளைச் செய்தும், பத்திரிகை ஆரம்பிப்பதில் பங்கு பெற்று உழைக்க இருந்தவர்களை மீண்டும் இங்கிலாந்துக்கே திருப்பி அனுப்பி விட்டார்கள் - கம்பெனியின் பெரிய அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்கள்.

ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி (James Augiustus Hicky) என்பவர்; அதிகாரிகளின் அதட்டல் மிரட்டல்களைக் கண்டு அஞ்சாமல் “வங்காள கெசட் அல்லது கல்கத்தா பொது விளம்பரத் தாள்” என்ற பத்திரிகையைத் துவக்கினார். இந்தப் பத்திரிகைதான் இந்தியாவின் முதல் செய்தித் தாள் என்று ‘இதழியல் கலை’ என்ற நூலில் ஆசிரியர் டாக்டர் மா.பா. குருசாமி கூறுகிறார்.

ஆனால், அவர் ‘இது உண்மை அன்று’ என்கிறார். ‘இந்திய விடுதலைப் போரில் இனிய தமிழ்’ என்ற நூலாசிரியரான டாக்டர் எஸ். துரைசாமி; ஏன் அவ்வாறு அவர் கூறினார் என்பதற்குரிய காரணம் இது:

“1811-ஆம் ஆண்டில் முதன் முதலாக வெளிவந்த ‘தமிழ்ப் பத்திரிகை’ கிறித்துவப் பிரச்சார ஏடாகவே இருந்தது” என்று:” மு.இ. முகமது மரைக்காயர் - தமிழ் இலக்கிய கொள்கை - பக்கம் 232-ல் அவரால் கூறப்பட்டதை துரைசாமி எடுத்துக் கூறுகிறார்.