பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

இந்தியாவில் - இதழியல் கலை! தோற்றம்! வளர்ச்சி! தொண்டு!



1882ஆம் ஆண்டில் ‘சுதேசமித்திரன்’ வார இதழாகத் துவங்கப்பட்டது. 1887ல் ‘லலிதப்ரஸ் நோதயா’ என்ற நாளிதழ் துவக்கப்பட்டது. அதையே முதல் நாளிதழாகக் கருத வேண்டும். ஆனால் அது விரைவாக நின்றுவிட்டது.
1892ல் ‘சுதேசமித்திரன்’ நாளிதழாக வரத் தொடங்கிப் பல்லாண்டுகள் நிலைத்துப் பணிபுரிந்தது. தமிழில் முதல் அரசியல் நாளிதழ் என்று போற்றப்படும் பேறு ‘சுதேசமித்திரனுக்கே’ உண்டு. இதன் ஆசிரியர் திரு. ஜி. சுப்பிரமணி ஐயர். இந்தியத் தேசியக் காங்கிரசின் முதல் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டவர். அவர் சிறந்த தேசியவாதி. 4.5.1887ல் அய்யர் இவ்விதம் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.
“நம் தேசக் கடைகளில் அரிசி, பருப்பு, காய்கறி தவிர மற்றவையெல்லாம் ஆங்கிலேயர் சாமான்களேயன்றி நமது சாமான்கள் அல்லவே! அப்படிப்பட்ட சாமான்களைச் சிருஷ்டிக்க நமது தேச மக்களுக்குத் திறமை இல்லையே! தைரியமில்லையே! ரோஷம் இல்லையே! ஆகவே, இவரையே நம் சுதேச இயக்கத்திற்கு வித்திட்டவர் என்று சொல்லலாம் அல்லவா?
பிரபலமான ஆங்கில நாளிதழ் ‘தி இந்து’விற்கும் இவர்தான் முதல் உரிமையாளர்.

- என்று, அ.மா. சாமி - தமிழ் இதழ்கள் தோற்றம் வளர்ச்சி என்ற நூலில் பக்கம் 210ல் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவர், கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் குறைகளை எழுதுவதற்குத் துவக்கப்பட்ட பத்திரிகை செய்தித்தாள் என்ற வகையிலே சேர்க்கப்பட்டு விட்டதே தவிர, அந்தப் பத்திரிகை கம்பெனியாரின் அரசியலை விமர்சித்த பத்திரிகையே ஆகும்.

ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கியின் பத்திரிகை வெளிவந்த ஆண்டு 1780. ஏறக்குறைய 93 ஆண்டுகளுக்கு முன்பே ஹிக்கி