பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நான்காவது அங்கம்
*****

இடம் - கடல் மூழ்கிக் கப்பலில் ஓர் அறை. ஹெர்மன் ஒரு மேஜையின் முன்பு உட்கார்ந்திருக்கிறான். ஒரு ஜெர்மன் கடல்படை உத்தியோகஸ்தன் எதிரில் நிற்கிறான்.

ஹெ. என்னுடைய ஆகாய விமானத்தைப்பற்றி கடைசியில் என்ன சமாசாரம் வந்தது?

க-உ. எங்களுக்கு அதிலிருந்து கடைசியில் கிடைத்த சமாசாரம்- “நாங்கள் எதிரிகளால் எதிர்க்கப்படுகிறோம்” - என்று ஆரம்பித்து திடீரென்று நின்றுவிட்டது ஆகவே அது பகைவர்களால் அழிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று அனுமானிக்கவேண்டியிருக்கிறது.

ஹெ. உம்! - இனி கால தாமதம் செய்ய முடியாது - நம்முடைய முக்கிய கைதியைப் பற்றி என்ன சமாசாரம் ?

க-உ. நல்ல செய்தியில்லே-அவனுடைய தேகம் என்ன இரும்பாலாயதோ என்னவோ தெரியவில்லை! எங்களால் ஆனமட்டும் வதைத்துப் பார்த்தோம்- கடைசியில் புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட மார்க்கங்களால் கூட - மிகுந்த பாதைப்படுவதாக முகத்தில் தோன்றுகிறதே யொழிய வாயைத் திறந்து ஒரு வார்த்தையும் பேசமாட்டேன் என்கிறான். - இந்த இந்தியர்களே ஒருமாதிரி யானவர்களாகத் தோற்றப்படுகின்றனர்!

ஹெ. சரிதான்-கொண்டுவா உள்ளே அவனை.- ஜாக்கிரதையாகக் காவலுடன் -அம்மட்டும் நமது கையை விட்டு அவன் தப்புவதற்கு இனி வழியில்லை -

(கடற்படை உத்தியோகஸ்தன் வணங்கிவிட்டு வெளியே போகிறான்)

ஹெ. என் ஆகாய விமானம் அழிந்து போனால் - நான் எப்படி திரும்பிப்போவது ஜெர்மனிக்கு-தலைவரிடம் சமாசாரம் சொல்ல.-அதுதான் கேள்வி !