பக்கம்:இந்தியா எங்கே.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம்

23


வைத்திருந்தான். அந்த மீசைக்கார ராசாக்களும் விளை யாட்டுப் பிள்ளைகள் போல் ஆளுக்கு ஐம்பது கல்யாணத் தையும், அவர்கள் வீட்டு நாய்களுக்கு ஆறு கல்யாணத்தை யும் செய்து கொண்டு தானே இருந்தார்கள். ஆகையால் வெள்ளையரை இந்த விஷயத்தில் நாம் நம்புவதற்கில்லை. பதவி பெற்ற அறிவாளிகள் வேண்டுமானால் நம்பலாம்.

பெருமைப் படத்தக்க நிலைமை

சிதறிக்கிடந்த சுதேச சமஸ்தானங்களை முதன் முதலாக ஒன்று சேர்த்து ஒரு தேசமாக்கிய பெருமை நமது மாபெரும்வீரர் படேலுக்கே உரியதாகும். அயர்ந்து கிடந்த ஆசியாவுக்கே இந்திய விடுதலை மூலம் ஒரு அந்தஸ்தை உண்டாக்கியப் பெருமை நமது பண்டித நேரு அவர்களைச் சாரும் நம்மை எதிர்த்தவருக்கும் இரக்கம் காட்டி நேசத்தை வளர்த்து சேவையிலேயே தமது ஆவியை அர்ப்பணித்து உலக ஜோதியான பெருமை அண்ணல் மகாத்மாவையே சாரும். முன்னேறும் ஒரு நாட்டில் பிரதம மந்திரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு மனித இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் லால்பகதூர் சாஸ்திரி போர்முனை வெல்லவும், ஏர்முனை பெருகவும், ஊர்மனம் செழிக்கவும், உத்தம நெறி காட்டிச் சென்ற ஒருவன் - திருக்குறளைப் போன்ற தூயவன் - அகத்தியனைப் போன்ற அறிஞன் அவன். அதற்குப் பின் வரும் பிரதம மந்திரிகளுக்கு ஒரு பாடமாக பழுதற்ற முன்னோடியாக, வெற்றி வீரனாக, லட்சிய ஜோதியாக வாழ்ந்து சென்ற வழிகாட்டி, நண்பன், நாணயமுள்ள தலைவன். இத்தகைய லட்சியத் தலைவர்கள் வாங்கியதுதான் இந்திய விடுதலை!

பல ஆயிரம் ஆண்டுகளாக கிடைக்காத ஒரு பாக்கியம் நமது பாரத நாட்டுக்குக் கிடைத்திருக்கிறது. அந்த அரிய செல்வத்தை வருங்காலத்தில் நாம் எப்படிக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறோம் என்பதை இன்றே நிச்சயம் செய்து கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/25&oldid=1401717" இலிருந்து மீள்விக்கப்பட்டது