பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை

"சிந்தாமணிக்குப் போல, இச்சூளாமணிக்கும்.உச்சி மேற் புலவர் கொள்ளும் நச்சினார்க்கினியர் ஓர் உரை எழுதி யிருப்பாராயின், இச்சூளாமணி, தமிழ்ப் புலவர் அனைவர்க்கும் சூளாமணியாய் மிகவிளங்கி யிருக்கும் என்று இனிது எடுத்து மொழியலாம்!"

உரைவேந்தர் எழுதிய உரைநூல்களில் 'யசோதர காவியம்' என்பதுமொன்று. பொதுவாக, மிகுந்த அளவில் பயிற்சியில்லாத நூல், எனினும் இதற்கும் உரை எழுதியுள்ளார். இஃது ஒரு சமண சமயநூல், முதன்முதலில் வடமொழியில் இயற்றப்பட்டது. பின்பு தமிழில் யாக்கப்பட்டது. 5 சருக்கம் 330 செய்யுட்கள் கொண்டது. ஆனால் இதன் ஆசிரியர் பெயர் தெரிந்திலது. முதலில் மூலநூல் மட்டுமே அச்சில் வந்துள்ளது. உரைவேந்தரே முதன்முதலாக இதற்கு உரை எழுதியவர். பல படிகளை ஒப்பு நோக்கித் திருத்தங்கள் கண்டு, புத்துரை வகுத்துள்ளார். தொடக்கத்தில் ஓர் ஆராய்ச்சி முன்னுரை உள்ளது.

இந்நூலாசிரியர், இசையைப் பற்றித் தவறான எண்ணத்துடன், நூலினை உருவாக்கியுள்ளார். அது தவறு என்பதை உரைவேந்தர், இம்முன்னுரையில் விரிவாக எடுத்து விளக்குவது அறிவுக்கு விருந்து எனலாம்.

"இந்நூலாசிரியரால் பழி தூற்றப்பட்ட இசை யினைப் பற்றிச் சிறிது ஈண்டுக் கூறுவது வேண்டற் பாலதொன்று. இசை என்பது வழுத்த வாயும், கேட்கச் செவியும் பெற்ற உயிர்கட்கு இயல்பா யமைந்த இன்பப் பொருளாகும். நிலவுலக வாழ் விற்கு நான்கு பொருள்கள் இன்றியமை யாதன என்றும், அவை முறையே உணவு, உடை, உறையுள், இசை என்பன வாம் என்றும் அமெரிக்க நாட்டு அறிஞர் ஒருவர், “Music is the fourth great material want of our nature-first food, then raiment, then shelter, then music”

-N.Bovee

கூறுகின்றார்.... இவ்விசை உடலோடு கூடி வாழும் மக்கட்கு மிகஇன்றியமையாததென்பது...நாடோறும்