பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

'இந்தி' பொது மொழியா?


யடிகளாரின் இச் சீரிய கட்டுரையினைத் தமிழக மாந்தரின் கவனத்திற்குக் கொண்டுவரவும், அவ்வாற்றான் அவர் கட்குப் புத்துணர்ச்சியூட்டவும் கருதி இதனைத் தனியாக அச்சிட்டு வெளியிடுகின்றோம். தமிழன்பர்கள், மாணவமணிகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், ஏடெழுதுவோர் ஆகியோர் இதனை வாங்கியும் பிறரை வாங்கச் செய்தும் நாட்டில் தாய்மொழிப் பற்றினையும், தன்மான உணர்வினையும், இந்தி எதிர்ப்பு உணர்ச்சியினையும் வலுப்பெறச் செய்வதே தனித் தமிழ்த் தந்தை மறைமலையடிகளார்க்குக் காட்டும் நன்றியாகும். தாய்மொழி வாழ்ந்தால் தாய் நாடு வாழும். இன்றேல் நாடு நலிவுறும். இந்தி மொழித் திணிப்புப் போகின்ற விரைவினை நோக்கின், விரைவில் தமிழகம் இந்தி பேசுவோரின் வேட்டைக் காடாக மாறிடுமோவென ஐயுற வேண்டியவர்களாக இருக்கிறோம். அத்தகைய நிலை தோன்றாதிருக்க வேண்டுமாயின் இத்தகைய வெளியீடு கட்குத் தமிழன்பர்கள் பேராதரவு தந்து 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழெ'ன்று முழங்குதல் வேண்டும். எனவே 'இந்தி பொது மொழியா?' என்னும் இவ் வெளியீடு தமிழன்பர் ஒவ்வொருவர் கையிலும் இருத்தல் வேண்டும். 'இந்தி பொது மொழியா? என்னும் அடிகளாரின் இந்த வினா இமய முதல் குமரிவரை உள்ள தமிழர்களின் உள்ளத்தினின்றும் எழும் உணர்ச்சிமிக்க வினா ஆதல் வேண்டும்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.