11
இயன்ற அளவு அறம் செய்தல் முற்பட இனிது. பண்பாளர் சொல்லும் பயனுள்ள அறிவுரைச் சிறப்பு இனிது. எல்லா நல்ல வாய்ப்புகளும் உடையவராய், நாணிலிகள் அல்லாராயுள்ள நல்லவரைப் பாதுகாவலராகக் கொள்ளுதல் இனிது.
6
அந்தணர்கள் வேதம் ஒதுதல் மிகமிக இனிது. உடல் வலிமை உடையவன் படையை ஆளுதல் முன் இனிது. தன் தந்தையே யானாலும் அடங்காப் பிடாரியா யிருப்பா னாகில் அவனை ஏற்றுப் பொருந்தா திருத்தல் இனிது.
7
போருக்கு ஏறிச்செல்லும் குதிரை வலிமை உடையதா யிருத்தல் முன் இனிது. மாலையணிந்த மன்னர்க்கு ஏற்பட்ட கொடிய போர்க்களத்தில் மலைபோன்ற யானைப் படையின் மறப்போர் காட்சிக்கு இனியது. நல்லதில் ஆர்வம் உடையவர்கள் மிகவும் நல்ல அற உரைகளை ஐய மயக்கம் இல்லாதவராய்க் கேட்பது இனிது.
8
தம்மிடம் பற்றுடையவர் சிறப்பாய் வாழ்தலைக் காண்பது இனியது. இடம் அகன்ற அழகிய விண்ணில் அகன்ற முழு நிலாவைக் காணுதல் இனிது. பழுதற்ற செயலராய், யாரிடத்தும் பரிவுகொண்டு அன்புடையவராய் ஒழுகுதல் இனிது.
9
கடன் வாங்கி உண்டு வாழாதிருத்தல் இனியது. கற்புச் சிறப்பு இல்லாத மனைவியை நீக்கி விடுதல் இனிது. மன நலம் இல்லாதாரை அஞ்சிப் பிரிதல் எல்லா நலத்தினும் மிகவும் இனிது. 1
10