இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
104
இன்ப
மக்கள் பிணியைப் போக்குவதற்குப் பதில், துன்பங்களைத் தூவுவதாக இருக்கும்! விரைவாக நான் வெற்றி பெற்றாக வேண்டுமே!
[எண்ணிக் கொண்டே, சுவடியை எடுத்துக் கொண்டுபோய் வேறொர் இடத்தில் பத்திரப்படுத்தி விட்டு வந்து, தன் ஆராய்ச்சிப் பகுதியில் நுழையப்போகிறார். அரசுப் பணியாள் ஒருவன் வருகிறான்.]
பணி: வணக்கம் பெரியையா!
அறி: நீ வளத்தோடு வாழ்வாயாக!
பணி: மன்னர் தங்களை உடனே பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்.
அறி: மன்னரா? பாதுகாவலரா?
பணி: மன்னர்தான்!
அறி: வருவதாகச் சொல்!
[பணியாள் வணங்கிவிட்டுப் போகிறான்.]
திருமுடியாரின் கித்துக்களைப்பற்றி விக்ரமன் விளக்கி இருப்பான்; விளக்கம் கேட்க விரும்பி இருப்பார் மன்னர்;
[என்று வாய்விட்டுச் சொல்லிக் கொண்டே, உடைகளை மாற்றிக் கொள்கிறார்.]
காட்சி—35
[அரண்மனை மண்டபம். அரசன் குமாரவேலன் அமர்ந்திருக்கிறான். ஆழ்ந்த கவலையுடன்! விக்ரமன் போர் பற்றிய சில விளக்கங்களை கூறிக் கொண்டிருக்கிறான். அறிவானந்தர் வருகிறார்.]
குமார: வாருங்கள் தாத்தா! எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் இருவரும்! திருமுடியாரின் திருவிளையாடல்களை, மெய்ப்பொருளின் துணைகொண்டு நீங்கள் வெற்றி கண்டீர்களாம்; விக்ரமர் விளக்கினார் அனைத்தையும்!
அறி: உண்மைதான் மன்னா! ஊர், அந்த அளவுக்குக் கெட்டுப் போயிருக்கிறது!