பக்கம்:இன்ப வாழ்வு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளை தந்த பெருவாழ்வு

அவள் வருத்தத்திற்கு அளவேயில்லை. ஏன்? அவன் அன்று போல் இன்று நடந்து கொள்ளவில்லை. அன்று அன்பின் உச்சியில் நின்றான். இன்று அவன் நடத்தையில் பெரிய மாறுதல் காணப்பட்டது. ஆனால் அவள் விடுவாளா? வேறு எதற்கும் விட்டுக் கொடுக்கலாம். இந்நடத்தைக்கு மட்டும் விட்டுக் கொடுக்க எப்பெண்தான் மனம் துணிவாள்? அப்படி என்ன அது?

米 ※ :::

அன்றொரு நாள், மணம் ஆகாத காலம், அவளும் கன்னிப்பெண்-தன் தோழிமார்களோடு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். அவனும் கட்டிளங்காளை - அங்கு வந்தான். அவன் கண்கள் அவள் உளத்திற்குத் தூது சொல்லின. இருவர் உளமும் இயைந்தன. பிணைந்த உறவு உண்டாயிற்று. உறவு காதலாகவும் மாறியது. சுருங்கக் கூறின் ஒருவரையொருவர் மணந்து கொள்வதாக உறுதியும் செய்து கொண்டார்கள். தாய் தந்தையர்களும் உடன்பட்டனர். திருமணம் இனிது நிறைவேறியது.

காதலர் இருவரும் களிப்புடன் குடும்பம் நடத்தி வந்தார்கள். அவர்களின் அன்பிற்கு அடையாளமாக ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/124&oldid=550694" இலிருந்து மீள்விக்கப்பட்டது