பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

73



என் அரிய மாணவ நண்ப! இது காறும் யான் கூறியவற்றை உள்ளத்தில் கொண்டு, உரிய வேலைகளை உரிய நேரத்தில் செய்துவிடின், துன்பம் இன்றி இன்பம் எய்தலாம். பொன்னினும் சிறந்த பொருள் அருங்காலம், அல்லவா? வாழ்க பல்லாண்டு.

இங்ஙனம்
உன் ஆசிரியன்


மடல் - 3

எண்ணித்துணிக

அன்பு கெழுமிய நண்ப

நலம். நலம் பல பெருகுக, உன் மடல் வந்தது. மனம் சரியில்லை - எதைச் செய்யத் தொடங்கினும் ஒரே குழப்பமாயிருக்கிறது - சூழ்நிலையும் சரியில்லை - என்று மடலில் எழுதியிருக்கிறாய். தெளிவான எண்ணத்தோடு செயல் தொடங்கின் வெற்றி பெறலாம்.

திருவள்ளுவனார் என்ன கூறியுள்ளார்? ‘எண்ணித் துணிக கருமம்’ என்றார். எண்ணுதலோ அதாவது சிந்திப்பதோ தெளிவு பெறுவதற்குத்தான். இந்தச் செயலை மேற்கொள்ளின், ஆக்கம் கிடைக்குமா அல்லது அழிவு நேருமா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். இன்னாருடன் சேர்ந்து செய்யலாமா என்றும் ஆய்ந்து பார்க்கவேண்டும்.

தொழிலை எந்த இடத்தில் தொடங்கினால் வெற்றி கிடைக்கும் - எந்தக் காலத்தில் தொடங்கினால் மேன் மேலும் வளரும் - என இடமும் காலமுங்கூட நன்கு எண்ணிப் பார்த்துத் தேர்ந்தெடுத்துத் தொடங்கவேண்டும்.