பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

107




திருக்குற்றாலம்
தென்காசி
15.2.47

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

கண்ணனூரிலிருந்து அனுப்பிய கடிதம் நேற்றே வந்துவிட்டது. பலராமுக்கு எழுதிய கடிதத்தையும் பார்த்துக்கொண்டேன். தங்கள் மனம் தமிழ்நாட்டை நோக்கியே இருக்கிறது. எத்தனைவிதத்தில் நாம் வாழ்க்கையை அனுபவிக்க முடிகிறது இங்கே தமிழ்நாட்டு குற்றாலம், அருவி, கோயில், தமிழ்ப்பாட்டு, தமிழ்த்தெய்வம், ஐயப்பன், தமிழின் கும்மாளிப் பேச்சுக்கள், தென்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த தமிழ்ப் பண்பாடு இவைகளை எல்லாம் தாங்கள் அனுபவிக்கிறார்கள். இவைகளுக்குப் பாத்தியாக மலையாளத்தில் ஏதேனும் உண்டோ, கிடையாது.

இப்போது தாங்களுக்கு ஆங்கிலப் பாடல் ஒன்றின் பொருள் தெரியவரலாம்.

Home home sweet home

There's no place like home.

இரண்டாவது பாரத்தில் இதைப் படித்தேன். சப்தத்தைத் தவிர வேறு ஒன்றும் நுழையவில்லை எனக்கு.

மன்னார்கோயில் இளைஞருக்கு இரண்டு வரியும் சுகமாக வந்திருக்கிறது. தமிழின் பண்பு அவருக்குத் தென்பட்டிருக்கிறது. தமிழை அனுபவித்து வெறிகொள்ளக் கற்றுக்கொண்டார். வெகு திருப்தி.

தமிழை, வித்வான் ஆவதற்காகப் படித்தவர்கள் பாடு பெரும் பாடாகத்தான் இருக்கிறது. தென்காசி ஹைஸ்கூல்