பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

ரசிகமணி டிகேசி




கல்கி
24.4.46

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

கம்பர் கோயில் நிதி சம்பந்தமாக கல்கி சதாசிவம் நான் மூவர்களும் யோசனைசெய்தோம். ஆகஸ்டு மாதம் கச்சேரி வைத்தால் பலவிதத்திலும் செளகரியமாய் இருக்கும் என்று தெரிகிறது. முதலில் நமக்கு வசூல் செய்யக் கால வசதி இருக்கிறது. அரசியல் களேபரங்கள் எல்லாம் ஓய்ந்து ஆட்சியும் அமைந்துவிடும். எல்லாரும் ஒத்துழைக்க மன அமைதியும் ஏற்படும். ஆகஸ்டு மாதம் கடைசியில் செளகரியமான இரண்டு நாளைக் குறித்துக் கொள்ளுங்கள்.

இடையில் ஜூன் மாதம் 15 ஆம் தேதி கல்லிடைக்குறிச்சிப் பள்ளிக் கூடத்துக்காக ஒரு கச்சேரி ஏற்படாகி இருக்கிறது. முன்னமேயே ஏற்படான விஷயம். கல்லிடைக் குறிச்சியில்தான் கச்சேரி. நன்கொடையாளரை கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் இரண்டு ஊர்களைத் தவிர வேறு இடம் போய்த் தேடப் போவதில்லையாம். ஆகையால் அது நம்முடைய காரியத்தைப் பாதிக்கப் போவதில்லை.

வசூல் செய்யவேண்டிய காரியத்தை இப்போதே ஆரம்பித்து விடலாம். கல்கியும் சதாசிவமும் இந்த விஷயத்தைத் தங்களுக்கு எழுதச் சொல்லுகிறார்கள்.

ராஜாஜி டில்லியிலிருந்து 30.4.46 அன்று வருகிறார்கள். வந்து இரண்டு நாளையில் அவர்களும் கல்கியும் குடும்பத்துடன் குற்றாலம் வருவதாக ஏற்பாடு. ஆகவே எனக்குச் சென்னை வாசம் நீடிக்கிறது.

குற்றாலம் வந்த பிறகல்லவா ராஜேஸ்வரியை அழைக்க வேண்டும். வீட்டில் எல்லாரும் செளக்கியந்தானே.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்