பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 இரணியன் எல்லாவித ஆதரவுகளையும் தேடிக்கொள்ள முடி யும். இப்போது சிறைப்பட்டவர்களைத் தக்திர மாக மீட்க வழி தேடினால் போதும். ப்ரகலாதன் :- அதற்கென்ன செய்யலாம்? நீங்களே சொல்லி யருளுங்கள். மகரிஷி:- இன்றிரவு கிரும் இங்குள்ள வேறு சிலரும் மாறுவேஷத்துடன் அரண்மளையண்டை சென்று சிறைப்பட்டவர்களை மீட்டுக்கொண்டு வந்துவிடு வது உமக்குக் கஷ்டமல்லவே! சித்ரபானு:- நாதா! அவ்வாறே செய்யலாம். எப்படி யாவது என் உறவினரும் தாயாரும் மீண்டால் போதும். ப்ரகலாதன்:- அவ்வாறே உறுதி கூறுகிறேன். சித்ரபானு:-- அப்படியானால் நான்தான் உங்களுடன் வகுவேன். ப்ரகணதன்:- என் ஆருயிர்க்காதலியே! கட்டுக்காவல் உள்ள ஆபத்துக்குரிய இடத்தில் நீ வரலாகாது. சித்ரபரணு:-- ஒருபோதும் அப்படிப்பட்ட ஆபத்தான இடத்திற்கு உங்களை கான் தனியாக அனுப்பச் சம்மதிக்கமாட்டேன். உயிரைவிட்டு உடல் பிரியா ததுபோல் நான் தங்களை விட்டுப் பிரியமாட்டேன். உங்களுக்கு கேரிடும் ஆபத்து எனக்கும் நோட்டும். இதற்குச் சம்மதிக்காவிடில் என்னுயிரை இப்போதே மாய்த்துக் கொள்வேன். வீரகலாதன்:-மாமா! இதென்ன, சித்ரபானு இந்த விஷ யத்தில் இவ்வாறு பிடிவாதம் செய்கிறாள்?