பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 13. - இடம்:- அரண்மனையின் ஓர் புறம். பாத்திரங்கள்:-ஆரியர்கள், கால்கேயன், சேனாதிபதி. சேனாதிபதி:- நீங்கள் அனைவரும் ஆயுதபாணிகளாசகப் பிரகதன் தனியறையைச் சார்ந்த பல பக்கங்களி லும் பதுங்கியிருங்கள். மகரிஷி:-ஹிரண்யன் இச்சமயம் ப்ரகலாதனிடம் கேசப மாய் வாக்கூடும். ராஜ விஸ்வாஸப் பிரமாணம் செய்யும்படி கட்டாயப்படுத்தக் கூடும். மேலும் அந்த ஹிரண்யன் ஸ்ரீமந் நாராயணமூர்த்தியைப் பற்றியும் இகழ்ந்து பேசுவான். அச்சமயம் திடீ சென்று அவன்மேற் பாய்ந்துவிட வேண்டும். காங் கேயா! கமது காரியத்தை நாமே செய்யவேண்டும். இதோ! இந்தச் சிங்கத்தோலைப் போர்த்துக்கொள். பயப்படாதே. சேனாதிபதி உடன் இருக்கிறார். சக்ரவர்த்தி என்னமோ மிக்க கலக்கமடைந்தே விருப்பான். சேனாதிபதியவர்களே! தாமதிக்காதீர் கள். இதோ வந்து விட்டோம். [சேனாதிபதி ப்ரகலாதன் அறையை நோக்கி ஓடுகிறான். உடனே சித்ரபானு தனது ஆணுடை யுடன் அங்கே ஓடிவருகிறாள்,) சித்ரபானு:-[தனது கூட்டத்தாரை கோக்கி]சேனாதி பதியையும் அதே நேரத்தில் ஒழித்துவிட வேண் டும். ஆரியர் விஷயத்தில் அவனுக்குச் சிறிதும்