பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


நான் குழந்தையாயிருந்த காலம் தொட்டு நீ என் நெஞ்சத்தில் வாழ்ந்து வருகிறாய்.

-வ. ப

ரவினூடே உன் கையை நீட்டு, அதை நான் பற்றிக் கொள்ள, நிரப்ப, வைத்துக் கொள்ள ஒப்புவாய், நீண்டு கொண்டேபோகும் என் தனிமையில் அதன் தொடுகையை நான் உணரவேண்டும்.

-க.கொ

றப்பது உறுதி என்ற நிலையிலும் தான் இறப்பற்றவன் என்ற எண்ணத்தை மாந்தனுள் எழுப்புவது எது?

புரிதல் என்ற தொடர்பு நிலை அரை குறையானது, ஆனால் காதல் என்கிற தொடர்பு முழுமையானது.

சா

ல்லோருடனும் நீ பேசி முடித்த பின்னர் தான் எனது முறை வருகிறது. உனது கடைசி பணியாளன் செய்யவேண்டியது என்ன உள்ளது என்று அறிந்து கொள்ளவே உன்னிடம் நான் வருகிறேன். -

-தோ

ம் உள்ளுயிர்களை நாம் மாய்த்துவிடக் கூடாது. நம்மிடம் நிலைத்து நிற்பது எதுவோ அதை வெளிப்