பக்கம்:இரவு வரவில்லை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தி அழகில் வானம்-உன்னை
அண்டா நாள்நினை வூட்டும்!
அடிவான் மங்கும் செம்மை-ஊடல்
அலைக்கும் உன்முகத் தோற்றம்!
முந்திப் பரிந்து நானே-உன்றன்
முடக்கைத் தீர்த்தா லன்றி
‘முகத்தைத் திருப்பேன்’ என்பாய்!-உன்றன்
முகம்நான் காண்ப தென்றோ?
4


ஒளியை விழுங்கும் இருள் போல்-என்றன்
உயிரை விழுங்குதுன் பிரிவே!
உலகம் களிக்க இரவில்-வானில்
ஊரும் மதிநீ எனக்கே!
எளியேன் உன்னை நீங்கி,-அந்தோ!
எத்தனை நாட்கள் வாழ்வேன்?
எங்கும் நிறைபேர் எழிலே!-வாழ்வில்

எவ்வழி வந்துனைச் சேர்வேன்?
5

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/47&oldid=1180069" இலிருந்து மீள்விக்கப்பட்டது