இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23. என்ன முழுகிவிடும்?
வட்ட நிலவுகண்டால்-அதிலுன்
வாள்முகம் தோன்றாதோ?
எட்டி எனைப்பிரிந்தே-சென்றால்
என்ன முழுகிவிடும்?
1
மங்கையுன் வாள்விழியை-வீரன்
வாள் நுனி காட்டாதோ?
இங்கெனை நீவிடுத்தே-சென்றால்
என்ன முழுகிவிடும்?
2
மொட்டு வரிசையெல்லாம்-உனது
முத்துப்பல் தோன்றுதடி!
விட்டுப் பிரிந்துசென்றால்-தமிழ்வெறி
விட்டுப் பிரிந்திடுமோ?
3
மின்னல் தவழ்ந்து வந்தால்-அதிலுன்
மெல்லிசிை காணேனோ?
என்னைப் பிரிந்துசென்றால்-உலகில்
என்ன முழுகிவிடும்?
4
சங்க இலக்கியமும்,-தமிழ்வீரம்
சாற்றும் புறப்பொருளும்
இங்கே இருக்குதடி!-நீபோனால்
என்ன முழுகிவிடும்?
5
நெஞ்சுருக்கும் குயிலில்-உனது
செஞ்சொல்லைக் கேளேனோ?
வஞ்சித்தெனைப் பிரிந்தால்-கடலென்ன
வற்றித்தான் போய்விடுமோ?
6
39