பக்கம்:இரவு வரவில்லை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23. என்ன முழுகிவிடும்?


வட்ட நிலவுகண்டால்-அதிலுன்
வாள்முகம் தோன்றாதோ?
எட்டி எனைப்பிரிந்தே-சென்றால்
என்ன முழுகிவிடும்?
1


மங்கையுன் வாள்விழியை-வீரன்
வாள் நுனி காட்டாதோ?
இங்கெனை நீவிடுத்தே-சென்றால்
என்ன முழுகிவிடும்?
2


மொட்டு வரிசையெல்லாம்-உனது
முத்துப்பல் தோன்றுதடி!
விட்டுப் பிரிந்துசென்றால்-தமிழ்வெறி
விட்டுப் பிரிந்திடுமோ?
3


மின்னல் தவழ்ந்து வந்தால்-அதிலுன்
மெல்லிசிை காணேனோ?
என்னைப் பிரிந்துசென்றால்-உலகில்
என்ன முழுகிவிடும்?
4


சங்க இலக்கியமும்,-தமிழ்வீரம்
சாற்றும் புறப்பொருளும்
இங்கே இருக்குதடி!-நீபோனால்
என்ன முழுகிவிடும்?
5


நெஞ்சுருக்கும் குயிலில்-உனது
செஞ்சொல்லைக் கேளேனோ?
வஞ்சித்தெனைப் பிரிந்தால்-கடலென்ன

வற்றித்தான் போய்விடுமோ?
6

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/48&oldid=1180086" இலிருந்து மீள்விக்கப்பட்டது