தமிழன்னை போற்றி
தெண்ணெடு நல்வாடை முருகு மணக்கும்
செவ்வியை குண்டல கேசிநற் றெய்வம் சேரற் குவந்த திருமுகம் உள்ளாய்
தேமிகு காவியங் கண்மகிழ் செய்வாய் தண்டிரு வாய்மொழி வேத மொலிப்பாய்
தந்தமென் முல்லை யிலக்கண மிக்காய் சங்கக் களம்பரி பாட லிசைப்பாய்
சார்வளை யாபதி யுங்கையின் மின்னும் ! i
மண்டிய தேவார மாரிபணி யாவை
வான்மதி யிற்கலை சூழ வுடுப்பை மன்னிய நூலிடை வைப்பைபல் காஞ்சி
மற்றதன் மேன் மணி மேகலை பூண்பை பண்டைச்சிந் தாமணி யாலெழில் தோய்வை
பல்சந்த மாலைகள் கோவைகள் கொள்வை பாத ஞ் சிலப்பதி காரந் தொடுப்பை
பைந்தமிழ்ப் பாவை யினிப்பையிப் பண்பே ! o
தெள்ளிய சங்கக் கபிலர்நல் லோரா ற்
செய்யுள் வளஞ்செய்வித் தாய்தென் னிலத்தே வள்ளுவ ராலுல கூட்டினை முப்பால்
வண்கம்ப ரா லிரு ளோட்டினை யப்பால் ஒள்ளிய நெஞ்சிற் பெரும்புல வோ ரால்
ஒரரு எளின்சுவை யுணவும் வைத்தாய் எள்ளலில் தெய்வத நூலேணி யால்வா
னேறவும் நேர்வழி கண்டனை எம்மோங் ! :3