பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | | தொன்மையான வழக்குகளும் பொருந்தி நிற்கின்றன. ஆன்மீக ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் இந்த அற்புத நிகழ்ச்சி - மகாவிஷ்ணுவின் அவதாரமாகிய இராமன் மகாதேவராகிய சிவனை வழிபட்டமை காலங் காலமாக மக்கள் மனத்தில் பதிந்து இடம் பெற்று இராமேஸ்வரத்தை அனைத்து இந்திய அளவில் சைவ, வைணவ ஒருமைப்பாட்டுக்குச் சிறப்பான பெருமைமிக்க பெருந்தலமாக விளங்கச் செய்துள்ளது. அரியும். சிவனும் ஒன்றே என்ற சைவ வைணவ சமரச சித்தாந்தத்திற்கு இராமேஸ்வரத்தை விடச் சிறந்த சான்று வேறு இருக்க முடியாது.