பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. இரண்டாம் திருமுறைப் பாடல்கள் இத்திருமுறையில் 103 பதிகங்கள் அடக்கம். இவற்றுள் அடங்கிய பாடல்கள் 1388, இத்திருமுறை யில் 23 அகத்துறைப் பதிகங்கள் உள்ளன. இதில் அடங்கிய பாடல்களின் தொகை 452. இத்திருமுறை யில் சில பதிகங்களையும் அவற்றில் அடங்கிய சில பாடல்களையும் காண்போம். - 1. கருணை விண்ணப்பம்: இது அறுசீர்க் கழிநெடி லடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த பத்துப் பாடல் களைக் கொண்டது. பாடல்கள் யாவும் பொது £☽ ffföᏈTöᏡᎧᎧaf . - இடமே பொருளே ஏவலே என்றென் றெண்ணி இடர்ப்படுவோர் மடமே உடையேன் தனக்கருள்நீ வழங்கல் அழகோ ஆநந்த நடமே உடையோய் நினைஅன்றி வேற்றுத் தெய்வம் நயவேற்குத் திடமே அருள்தான் வழங்காது தீர்த்தல் அழகோ தெரிப்பாயே (2) நாயேன் துன்பக் கடல்வீழ்ந்து நவிதல் அழகோ நல்லோர்க்கிங்கு ஈயேன் ஒன்றும் இல்லேன்நான் என்செய் கேனோ என்னுடைய தாயே அனையாய் சிறிதென்மேல் தயவு புரிந்தால் ஆகாதோ