ஆய்வுச் சங்கம்
386
68. பனைலெட்டி யெழுதுண்டு படவெட்டி யவையும்
பலபட்ட பிளவுண்டு படவெட்டு மொளிவாள்
திணிபட்ட சிறு தட்டை யதுபட்ட வீர்க்கின்
சிதர்வெட்ட வாய்நாணிச் சிறைபுக்கு மோதான்;
சினைபட்ட பெருவாளை கமுகுக்க ளுண்டு
தெளிவற்ற வெறிகொண்டு புறமுன்றில் வீழப்
புனல்பட்ட கருமேதி யக்லபட் இழக்கும்
பூந்தாம் ரைப்பொய்கை சூழ்பண்ணை நாடா!
69. பொருதாது தனி நின்ற பொருவற்ற வனையைப்
புகவின்றி யையோபெண் கொலைசெய்து கொன்ற
கருதாரை யிமையாமுன் கழுகுண்ணத் தந்து
கதிர்வேலி னார்தும்பை யுதிராமுன் வருவேன்;
ஒருநாளி லேழெட்டுத் தேர்செய்யும் தச்சன்
ஒருமாத மாராய்ந்து கைசெய்த வுருளின்
விரைவோடு வலிகொண்டு பொருதேம் சொன்னார்
விஞ்சாம் லுயிருண்ணு மஞ்சாத மறவா!
70, பகையின்றி யேவந்து பகைதேடிக் கொண்ட
பழிகார வடவோரை யொழியாம லெவரும்
புகையொன்று மெரிபஞ்சுப் பொதிவீழ்ந்த தென்னப்
புகலின்றி முதுசோரி யுகவென்று வருவேன்;
தொகைநின்ற நிரைகன்றின் பசிதண்ட மேவச்
சுவையொன்று குழலோசை செவிகொள்ள ஓதும்
நகைவென்ற நறுமுல்லை மலர்முன் றில் தோறும்
நல்லாயர் மல்வென்றி கொள்கான நாடடா!
-- -- - --- ----
68. பலபட்ட பிளவு உண்டுபட•பலபிளேவாக, சித்ர்-
நுண்மை . கள்-தேன. மேதியின் புறமுன றில் வீழ. புறமுன் றில்-
முதுகு, வாளை துள்ளிக் கமு கடைந்து கள் ளுண்ட தென்க,
69, அனை- தாடகை. புகல்- துணை. கைசெய் தல்-வினைத்
பிறமையோடு செய்தல், உருள - சக்கரம். மன் - உறுதியாகி.
விஞ்சாமல்-எஞ்சாமல்.
70. சோரி- இரத்தம், நிரை-பசுக்கூட்டம், தண்ட நீங்க,
நகை-பல் மல்-உடல்வலி.
இ-25
பக்கம்:இராவண காவியம்.pdf/411
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
