பக்கம்:இரு விலங்கு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

இரு விலங்கு


உடையவனாக எழுந்தருளியிருக்கிறான். கூட்டில் அடை பட்டிருக்கிற கிளியைக் காப்பாற்ற ம ற் றொ ரு ரு கிளி கூட்டிலே அடைபட்டு வருவது போல, முக்குணங்களினா லான கூண்டில் அடைபட்டிருக்கிற நம்மை உ ய் வி க்க ஆண்டவன் எண் குண பஞ்சரத்துள் அடைபட்டவனைப் போல வருகிறான்.

"எண்குண பஞ்சரனே"

என்று கந்தர் அநுபூதியில் பாடுவார் அருணகிரியார்,

படமும் மங்கையும்

 ரு பையன் திருநெல்வேலியில் இருக்கிறான். அவ னுக்குக் கல்கத்தாவில் இருக்கிற பெண்ணைத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று பெரியவர்கள் முயற்சி செய்கிறார்கள். கல்கத்தாவிற்குச் சென்று பெண்ணைப் பார்ப்பதற்கு ஒய்வு கிடைக்கவில்லை. ஆகையால் முதலில் பெண்ணைப் பெற்றவர்கள் அந்தப் பெண்ணின் படத்தை அவனுக்கு அனுப்புகிறார்கள். அந்தப் படத்தைக் கண்டு, அவள் குட்டையும் அல்ல, நெட்டையும் அல்ல; நடு உயரம், மூக்கும் விழியும் எடுப்பாக இரு க் கி ன் ற ன என்று தெரிந்துகொண்டு, ஒரளவு மனத்தில் வி ரு ப் பத் தைத் கொள்வான். அதனே அடுத்து அந்தப் பெண்ணைத் தானே நேரில் போய்ப் பார்க்கவேண்டுமென்று ஆசைப் படுகிற நிலை வரும், படத்தைப் பார்க்கிறபோது அந்தப் பையனுக்குப் பெண்ணின் உருவம் ஒருவாறு உள்ளத்தில் பதிகிறது. அப்படிப் பதிந்தாலும் பெண்ணின் உருவம் உள்ளது உள்ளபடியே பதிவது இல்லை. ஆனாலும் அது அவன் உள்ளத்தில் காதலை விளையச் செய் கிற து; ஆகவே பெண்ணை நேரில் பாராவிட்டாலும் அவளுடைய படத்திற்கும் ஒரு பயன் இருக்கிறது. அதுவே முடிந்த பயன் அல்லாவிட்டாலும் தொடக்கத்தில் அது பயனுள்ள தாகவே இருக்கிறது. மூலப் பொருளாகிய பெண்ணைக்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/46&oldid=1402461" இலிருந்து மீள்விக்கப்பட்டது