பக்கம்:இரு விலங்கு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

இரு விலங்கு


 அத்தகைய பெருமானுடைய திருக்கோலத்தைக் கோயில்களில் அலங்கரித்துப் பார்க்கும்போது நம்மை அறியாமல் பக்தி விளைகிறது. அருணகிரிநாதப் பெருமான் பெரும் காதலுடன் திருச்செங்கோட்டு முருகனுடைய அழகுத் திருக்கோலத்தைக் கண்டார். கண்டவுடன் அவ ருக்கு எல்லையில்லாத ஆனந்தம் உண்டாயிற்று. 

உணர்ச்சியும் இன்பமும்

 ரு பெண்ணுக்குக் காதலன் கடிதம் எழுதுகிறான்; அந்தக் கடிதத்தை அவள் காணும்போது அடைகிற உணர்ச்சி வேறு. அதையே வெறும் காகிதமாகக் கடைக் காரன் வாங்கிச் செல்கிறபோது அவன் அதைக் காணுகிற நிலை வேறு. இரண்டு பேருக்கும் காகிதமும், எழுத்தும் ஒன்று ஆனாலும் எழுத்தை எழுதினவனுடைய நினைவும், அவன்பால் அவள் கொண்ட அன்பும் அந்தப் பெண் ணுக்குக் காதல் உணர்ச்சியை மிகுதிப்படுத்துகின்றன. அப்பர் சுவாமிகள் நடராசப் பெருமானக் கண்டு, .

"குனித்தபுருவமும் கொவ்வைச்செவ்வாயில் குமிண்சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீ 
றும், இனித்தமுடையஎடுத்தபொற் பாதமும்காணப்பெற் 
றால்,மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே"

என்ற அற்புதமான பாடலைப் பாடனார். நாமும் அதே நடராசப் பெருமானைக் காண்கிரறோம். ஆனாலும் நமக்கு அத்தகைய உணர்ச்சி உண்டாவதில்லை. அந்தப் பெருமா னிடத்தில் உள்ள காதல் முதிர்ச்சி அடையவில்லை. அவனது திருவுருவத்தைக் கண்ணால் காணும்போது நம் முடைய உள்ளத்தில் ஆர்வமும் பக்தியும் நிறைந்திருக்க வில்லே என்பதுதான் காரணம்.

 வெடிமருந்தைக்கெட்டித்திருக்கிற குழாயில் ஒரு திரி இருக்கும் அந்தத் திரியில் நெருப் பை வைத்துவிட்டால்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/48&oldid=1402463" இலிருந்து மீள்விக்கப்பட்டது