பக்கம்:இறைவர் திருமகன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

நாட்களும் வீடு வாசலைத் துறந்து இயேசு நாதரின் பின்னே சுற்றிக் கொண்டிருந்ததற்கு தக்க பரிசு கிடைக்காமல் போகாது என்று அவர்கள் நம்பினார்கள். நம்மிலே யாருக்குப் பெரிய பதவி கிடைக்கும்? என்று அவர்கள் ஆலோசித்தார்கள்.

தங்களுக்குள் அவர்கள் பலவாறு பேசிக் கொண்டாலும், இயேசுநாதரிடம் எதுவும் காட்டிக் கொள்ள விரும்பவில்லை.

தனக்குச் சிறிது தொலைவில் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருந்த போது அவர்கள் பேசிக் கொண்டு வந்ததெல்லாம் அவர் காதில் விழவில்லை. ஆனாலும் அவர்களின் எண்ணங்களை அவர் அறிந்து கொண்டார்.

கேப்பர்நவும் நகருக்கு சென்று ஓய்வாக இருக்கும்போது இயேசுநாதர் அவர்களைத் தம் அருகில் அழைத்தார். "அன்பர்களே, வழியில் என்ன பேசிக் கொண்டு வந்தீர்கள்?" என்று கேட்டார்.

அவர்களுக்குத் தாங்கள் பேசிய செய்தியைச் சொல்லக் கூச்சமாயிருந்தது. யாரும் வாய் திறக்கவில்லை.