பக்கம்:இறைவர் திருமகன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

கோபத்தோடு தாய்மார்களிடம் சச்சர விட்டுக் கொண்டிருந்த தம் சீடர்களை நோக்கி "குழந்தைகளை வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில், அந்தக் குழந்தைகள் இறைவன் பேரரசுக்கு உரியவை" என்று கூறினார்.

தொடர்ந்து அவர் வந்திருந்த சிறுவர்களையும், சிறுமிகளையும் தம் அன்புக் கையினை வைத்து ஆசி கூறினார். சிறு குழந்தைகளைத் தம் கைகளில் ஏந்தி வாழ்த்தினார். அந்தத் தாய்மார்கள் பெருமகிழ்ச்சியடைந்தார்கள்.

இயேசுநாதர் குழந்தைகளிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பதைச் சீடர்கள் இரண்டாவது முறையாகத் தெரிந்து கொண்டார்கள்.