பக்கம்:இறைவர் திருமகன்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

"அந்தத் தீர்ப்பு நாளில் உங்கள் அரசர் நல்லவர்களை அழைத்து 'ஆண்டவன் அருளைப் பெற்றவர்களே, உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கும் பேரரசுக்கு வாருங்கள். நான் பசித்திருந்தபோது நீங்கள் எனக்கு உணவு கொடுத்தீர்கள். நான் தவித்திருந்த போது தண்ணீர் கொடுத்தீர்கள். நான் அயலவனாக வந்த போது நீங்கள் விருந்தினனாக ஏற்றீர்கள். உடுத்தத் துணியில்லாதிருந்த போது ஆடைகள் வழங்கினீர்கள். நோயுற்றிருந்த போது என்னை வந்து பார்த்தீர்கள். சிறைப்பட்டிருந்த போதும் தேடிவந்தீர்கள் நல்லவர்களே. இச்செயல்களை யெல்லாம் நீங்கள் என் உடன் பிறந்த மிக எளிய மனிதனுக்குச் செய்தாலும் அது எனக்குச் செய்ததையே ஒப்பாகும்" என்று கூறுவார்.

நேர்மையும், திறமையுமுள்ள நல்லவர்களுக்கு நிலையான பேரின்பவாழ்வு கிடைக்கும் என்பதை விளக்கிக் கூறிய இயேசுநாதர் தம் சீடர்களிடம் விடை பெற்றுக் கொண்டு பெத்தானிக்குச் சென்றார். அங்கு இரவு அமைதியாகக் கழிந்தது. மறுநாள் விடிகாலையில் எல்லாரும் ஜெருசலம் வந்து சேர்ந்தார்கள்.

ஏசு-6