பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இலக்கியக் காட்சிகள்


வாடி வேறுபட்ட நிலையில் தாய் ஐயுறும் பொழுதும், தமர் தவைவனுக்கு வரைவு மறுக்கும் பொழுதும், ந்ொது மலர் வரைவின்போதும், கட்டுக்கானிய நின்றவிடத்தும், கூட்டம் உண்மையினைத் தாய் அறிந்தவிடத்தும் முன்னிலைப் புறமொழிகளால் அறத்தொடு நிற்பாள். எனவே, வெறியாட்டு என்பது தோழி அறத்தொடு நிற்றலுக்குக் களம் அமைத்துக் கொடுக்கிறது என்றும், தலைவி மாட்டுத் தலைவன் கொண்ட காதலைச் சத்துவம் தோன்றத் தெரிவிப்பதற்கு ஒரு வாயிலாக அமைகிறது என்றும் கூறலாம். சுருங்கக் கூறின், பண்டைத் தமிழ் மக்களின் அகத்திணை ஒழுகலாற்றின் ஒரு கூற்றின்ை வெறியாட்டு விளங்கவுரைத்து நிற்கிறது எனலாம்.