பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 33



அறிதல் வேண்டும் அறிந்து அதன் வழி நடக்க வேண்டும் என விரும்பினான். உடனே தன் நாட்டு மக்களிடையே சென்றான். “அறிவாண்மையற்று, மதிக்கத்தக்க மாண்பிலாதாரையும், மதிக்கச் செய்யும் பேராற்றல் வாய்ந்தது பொருள் என்றும், மணந்து மனையறம் மேற்கொள்ளும் இல்லற வாழ்க்கை விருந்தினரை வரவேற்று, அவருக்கு அன்போடு அறுசுவை உணவளித்துப் போற்றுவதனாலேயே பொலிவுறும் என்றும் கூறுவர் பெரியோர்; அவ்வாறே கோடி கோடியளவான பொருளைக் குவித்து வைத்து, நாள்தோறும் விருந்தினர் பலரோடு இருந்து உண்ணும் பெருவாழ்வு பெற்ற பேறுடையான் ஒருவனுக்கு, மக்கட் பேறு இல்லையாயின், அவன் பெற்ற பெரும் பொருளும், பெருவாழ்வும் பயனுடையவாகா. அத்தகையான் வாழ்வு பெரு வாழ்வு எனப் போற்றப்படுவதில்லை; பயனிலா வாழ்வு என்றே பழிக்கப்பெறும்,” என அம்மக்கட்பேற்றின் மாண்பினை, அவர் உணரும்வகை எடுத்து உரைத்தான்.

“பெற்ற தம் மக்கள், பையப் பைய அடியெடுத்து வைத்துக் குறுகக் குறுக நடந்து சென்று, சிறிய தம் கைகளை உண்ணும் கலத்துள் இட்டு, உணவை எடுத்துத் தரையில் இட்டும், அவ்வுணவினைத் தாமே தோண்டித் தோண்டிப் பிசைந்தும், தம் வாயிலிட்டுக் கவ்வியும், மறுவலும் கலத்திலிட்டுத் துழாவியும், மீண்டும் வழித்தெடுத்துத் தம் உடலெலாம் பூசிக் கொண்டும் நிற்பதைக் கண்டு பேரின்பம் கொள்ளாத