பக்கம்:இலக்கியச்சுவை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

62 கருத்துக்கள்‌ அங்கு உருவம்‌ பெற்று வருவதை அவர்‌ கண்டார்‌. அந்த மகத்தான சமுதாய எழுச்சியை முஸ்லிம்‌ உலகுக்கு உணர்த்த அவர்‌ விரும்பினார்‌.

அந்த நிலையில்‌ “லெனின்‌' தேவ கன்னிகளின்‌ பாட்டு, இறைவனின்‌ ;கட்டளை?: என்ற முப்பெரும்‌ பாடல்‌ (Trilogy) உருவாயிற்று, இதில்‌ இக்பாலின்‌ கலை, உலகு. தழுவிய அம்சங்களைப்‌ பெறுகிறது. லெனின்‌ வாழ்ந்த நாளில்‌ கடவுளை நம்பியறியாதவர்‌; அவர்‌: ஒரு நாஸ்திகர்‌ அவர்‌ சோவியத்‌ வாழ்வின்‌ மூலவர்‌. மனித வர்க்கத்தின்‌ கணிசமான ஒரு பகுதி மக்கள்‌ சிறந்த நல்வாழ்வு பெற புதிய சமுதாயத்தைக்‌ கண்டவர்‌. லெனின்‌ படைத்த வாழ்க்கை அமைப்பில்‌ அடிமை இல்லை, ஆண்‌ டான்‌. இல்லை, சுரண்டல்‌ இல்லை. கொடுமை சூது இல்லை, எல்லோருக்கும்‌ சம உரிமை, சமவாய்ப்பு அளிக்கப்‌ படுகிறது. மகாகவி இக்பால்‌ இந்த வாழ்வை நேரிலும்‌ காண்கிறார்‌; உணர்ச்சிப்‌ பெருக்கடைகிறார்‌. இஸ்லாமிய உலகம்‌, இந்த நல்வாழ்வை ஒப்பி வாழவேண்டுமென்று விரும்புகிறார்‌. எனவே நாஸ்திகரான லெனினைத்‌ திடீ ரென்று ஆண்டவனை எதிர்ப்பட வைக்கிறார்‌. லெனினைப்‌ பல கேள்விகள்‌ எழுப்பவைக்கிறார்‌. ஆண்டவன்‌ வாய்‌ மொழியாக ஆண்டவன்‌ பதிலாக புதிய சமுதாயக்‌ கருத்‌ துக்‌ களை இஸ்லாமிய உலகுக்கு எட்டச்‌ செய்கிறார்‌. இக்கவிதையின நடை (Style) மரபுவழிவெளியீட்டுமுறை (Classic) க்கு ஓத்தது. எடுத்தாண்டக்கு பொருள்‌ அதீதக்‌ கற்பனை (Romantic) வகைப்பட்டது. லெனின்‌ பேச்சு துருவி ஆராய்ந்து எதையோ தெரிந்து கொள்ளத்‌ துடிக்கும்‌ | நிலையை வெளிப்படுத்துறெது. அவருடைய பாத்திரப்‌ படைப்பு “கோரஸ்‌”

அதீதக்‌ கற்பனையே, சேவக்‌ னிகளின்‌ ஓசை நயமும்‌ எதுகை மோனைச்‌ இறப்பும்‌ பெற

றிருச்கின்றன. உயிரின்‌ ஆழத்திலிருந்து பிறக்கும்‌ நாதவடி வின்‌ பெருமைகளை அந்த இசையில்‌ காண்கிறோம்‌. இறை வனின்‌ கட்டளை,

மிகுந்த

உணர்ச்சிக்‌ கட்டுப்பாட்டுடன்‌,

ஆழ்ந்த குரலில்‌ வெளிப்படுகிறது;

அதில்‌ பரம்பொருளின்‌

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/87&oldid=1523401" இலிருந்து மீள்விக்கப்பட்டது