பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44


வும் மூன்றாவது யுகத்தில் பலராமனாகவும் தோன்றிய அனந்தாழ்வாரே யாவார். கலியுகத்தில் இராமாநுஜராக அவதரித்துப் பொய் மதங்களை வென்று மெய்யான பரம்பொருள் விஷ்ணுவே என்பதை நிலைநாட்டிட வேங்கட மலையை அடைந்து அங்கிருந்த குதர்க்க வாதிகளை வென்றபின் பகவானைத் துதித்து, 'திருவேங்கடத்து அண்ணலே! இக்கலியுகத்தில் தங்கள் திருக்கோலம் முழுவதையும் காட்டாமல் சங்கு சக்கரங்களை மறைத்து நின்றால் மக்கள் பலவாறு பேசுகிறார்கள். தங்கள் தாமரைக் கைகளில் சங்கு சக்கரங்களை ஏந்திக் காட்சி தந்தருள வேண்டும்' என்று பிரார்த்தித்தார். பகவான் அன்று முதல் அவ்வண்ணமே காட்சி யளித்தார்.'

குதிருக்குள் இல்லை

இச்செய்தி, 'எங்கள் அப்பா குதிருக்குள் இல்லை” என்னும் கதைபோன் றிருக்கிறதல்லவா? இப்பகுதியில் உள்ள ஜனங்கள் அக்கடவுள் சிவபெருமான் என்றும் முருகன் என்றும் பலவாறு கூறி முரண்பட்ட கருத்துக்களால் பகைமை பூண்டு ஒழுகுவாராயினர். அதை அறிந்த இராமாநுஜர் அக்கருத்து வேறுபாடுகளைப் போக்க நினைத்தார். வேங்கடமலையை அடைந்து அங்கிருந்த குதர்க்கவாதிகளை வென்றபின்.........சங்கு சக்கரங்களை மறைத்து நின்றால், மக்கள் பலவாறு பேசுகிறார்கள்" என்னும் தொடர்கள் எண்ணத் தக்கன. முருகனைத் திருமாலாக மாற்றிய செயலால் மக்கள் பகைமை பூண்டு ஒழுக நேர்ந்தது. அதனால் மக்கள் பலவாறு பேச நேர்ந்தது, குதர்க்கவாதிகளை வென்றது’ என்பது, சைவர்களோடு வாதிட்டு முருகனைத் திருமால் ஆக்கியதைக் குறிக்கும்.