பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177


"தண் என மலர்ந்த நளிர்மலைச் சிலம்பில் கண் என மலர்ந்த மாயிதழ்க் குவளை'T 'தீநீர்ப் பெருங்குண்டு சுனைப் பூத்த குவளை’2 -என்பவற் றால் குறிஞ்சி நிலத்தில் பூப்பதையும், 'திறள்வேல் துதியில் பூத்த கேணி'3 -என்பதால் முல்லை நிலத்துக் கேணியிற் பூப்பதையும். 'குளாம்பல்”4 'குவளை குளத்துள'5 "ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்து’’6 -என்பவற்றால் மருத நிலத்தில் மலர்வதையும், 'கழியே சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப' என்பதால் கழியையுடைய நெய்தல் நிலத்தில் மலர்வதையும், . . " "தாழிக் குவளையொடு தண் செங்கழுநீர்'8 -என்பதால் எங்கும் தொட்டிகளில் மலர்வதையும் அறியலாம். . . இவ்வாறு, அனைத்து நில மக்களுக்கும் அறிமுகமான பூவாகையாலும் பொது எண்ணிக்கைக் குறியீடாகக் கொள்ளப் பட்டது எனலாம். ஆனால், ஆம்பல் இனத்தைச் சேர்ந்த குவளையும் தொல் காப்பியத்தில் எண் குறியீடாகக் கூறப்படினும் இலக்கிய ஆட்சி களில் தனித்தனியாக எடுத்துக் கூறி எண்ணாக அமைக்கப் படவில்லை. ஆம்பல் ஒன்றே எண் குறியீடாகத் தனியே காட்டப்பட்டுள்ளது. அருவியில் பூவா?... தனியே காட்டப்பட்டது மட்டும் அன்று, அருமையான சொற்றொடராகக் காட்டப்பட்டுள்ளது. அஃதும் கபிலரது 1 அகம் : 228 : , 3, 4 5. யாப் கா : 4 மேற்கோள் 2 புறம் : 1.16 : 1, 2 6 நற் : 200 : 6 8 சிறு பாண் : 172, 7 அகம் : 850 : 1. 4 நன் : 256 மயிலைநாதர் உரை, 8 சிலம்பு : 4 : 64, 米12