பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

515


பின் செல்லும் சட்டையணிந்தவர்போல வெண்கடம்பு பூத்தது . என்று வெள்ளைத் துணியாகப் பாடினார். இதனை வழிமொழி வதுபோன்று பிற்காலக் குமரகுருபரரும், - - 'மரவங்கள் நுண்துகில் வழங்க' - என்று நுண்ணிய ஆடையாகப் பாடினார். ; : தெய்வங்களின் நிறத்தோடு மலர்களை அறிமுகப்படுத்திய கவித்தொகை, - "ஒருகுழை ஒருவன்போல் இணர்சேர்ந்த மராஅமும்'3 என ஒரு காதணிகொண்டவனும் வெள்ளை நிறத்தவனுமாகிய பலராமனைக் குறித்தது. இக்கலித்தொகையே நாஞ்சில் படை யைக்கொண்ட இப்பலராமன் பசிய துளசி மாலை அணிந்துள்ள தோற்றத்தை வைத்து, 'கொடிய வலிமையுடைய நாஞ்சிற்படையைக் கொண்ட பலராமன் மார் பில் பசிய துளசிமாலை சூழ்ந்திருப்பது போன்று மராமரத்தின் மார்புபோன்ற உயர்ந்த கிளைப்பகுதி களில் பசியமயில்கள் சூழ்ந்திருக்கும்’4 - என்றது. இவற்றைப் பின்பற்றி பரிபாடலில் கண்ணன் கூத்தனார் . 'நாஞ்சில் வலவன் நிறம்போலப் பூஞ்சினைச் செங்கால்(மராஅம்’5 -எனப்பாடினார். சீத்தலைச் சாக் தனார், பசிய இலைகளைக்கொண்ட பச்சை மூங்கிலோடு வெண்மையான பூக்கள் செறிந்த மராம் பூவைக் காண்கின்றார் : “. ... ... . ، ، ... 3) 7ةكنك நெடியோன் முன்னொடு நின்றனனாம் என'க்க * , , - கண்ணன் பலராமனொடு நின்றதுபோன்றென உவமை கூறினார். இளம்பெருவழுதியார் பாட்டு பலராமன் மாார்பில் அணிந்துள்ள வெண்மையான மராமலர்த் தார் மலையிலிருந்து அருவி வீழ்ந்தது என்கின்றது. 1. சிவு, சி : 1558 * 5 &mi : 19. 2 மீ. பி. த 73 : 8. 6 மணி : 19 : 75, 77. 8 கலி : 26 , 1, 7 பரி , 15 , 19, 4 கலி : 88 t 1, 2,