பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 இலக்கிய அமைச்சர்கள் படையாற்றலைப் போற்ருதிருக்கவும் இல்லை. அத் தொண்டைமான் முன்னலேயே அதியமான் படைக் கலங்கள் அடியும் நுனியும் சிதைந்து கொல்லன் உலைக்களத்தில் கிடக்கின்றன என்று கூறினர். அதல்ை அதியமான் படைக்ள் போரில் பலகால் பயன் படுத்தப்பட்டவை ; பகைவர் படைகளைத் தாக்கித் தாக்கிப் பழுதுற்றவை ; மீண்டும் போர்வரின் பயன் படவேண்டும் என்பதற்காகக் கொல்லன் உலைக் களத்தில் வந்து குவிந்துள்ளன என்று புலப்படுத்தி, அவனது போராற்றலையும் படைவலியையும் பழிப்பது போன்று குறிப்பாகப் பாராட்டிய மூதாட்டியாரின் அரசியல் நுண்ணறிவை என்னென்பது!