பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டுடைத் தலைவன் இன்ன வேந்தன் என்பதும், அவன் அருஞ் செயல்கள் இன்ன என்பதும், அவளைப் பத்துப் பாடல்களில் பாடிய புலவர் இன்னார் என்பதும், அப் பாடல்களின் பெயர்கள் இவை என்பதும் சொல்லப் பட்டுள்ளன. பதிகத்தைச் சார்ந்த உரை தடைப் பகுதி யில் அப் பத்தினைப் பாடிய புலவர் பெற்ற பரிசிலும், வேந்தன் ஆட்சிபுரிந்த யாண்டின் தொகையும் கூறப் பட்டிருக்கின்றன. ஆகவே ஒவ்வொரு பத்தின் இறுதியி லுள்ள பதிகமும், உரை நடைப் பகுதியும் வரலாற்றராய்ச் சிக்குப் பெரிதும் பயன்படும் என்பது ஒரு தலை. பதிற்றுப் பத்தினைத் தொகுத்து தவிய புலவர் பெருந்தகை, பதிகங் களையும், உரைநடைப் பகுதிகளையும் சேர்க்காமலிருத் திருந்தால் இவ்வரிய நூலின் வரலாற்றினையும் அருமை பெருமைகளையும் பின்னுள்னோர் அறிந்து கொள்வது இயலாததாகும். இனிப் பதிகங்களின் அமைப்பினைப் பார்க்குங்கால் அவை பிற்காலச் சோழ மன்னர்கள் தம் கல்வெட்டுக் களின் தொடக்கத்தில் வரைந்துள்ள மெய்க் கீர்த்திகளை ஒருவாறு ஒத்துள்ளன எனலாம். கல்வெட்டுக்களில் முதலில் மெய்க்கீர்த்தி எழுதத் தொடங்கியவன், முதல் இராசராச சோழன் ஆவன். அந்நிகழ்ச்சியும் அவ் வேந்தனது எட்டாம் ஆட்சியாண்டாகிய கி. பி. 193-இல் தான் முதலில் நிகழ்ந்துள்ளது. எனவே மெய்க்கீர்த்திலைப் பின்பற்றிப் பதிற்றுப்பத்தில் பதிகங்கள் அமைக்கப் பெற்றிருந்தால் அவை கி. பி. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு இயற்றப்பட்டனவாதல் வேண்டும்; கனால் பதிற் றுப்பத்தில் பதிகங்கள் இறுதியிலுள்ள கல்வெட்டுக் களில் மெய்க்கீர்த்திகள் தொடக்கத்தில் உள்ளன. இவ்