பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐஞ்ஞாற்று நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலா யிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. - அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும் முதுநாரையும் முது குருகும் களரியா விரியும் என இத்தொடக்கத்தன. அவர் நாலா யிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்க மிருந்தா ரென்ப. அவர்களைச் சங்கம் இரீஇயினார் காய்சினவழுதி முதலாகக்கடுங்கோன் ஈறாக எண்பத்தொன்பதின்மர் என்ப. அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல்கொள்ளப்பட்ட மதுரை என்ப. அவர்க்கு நூல் அகத்தியம் என்பதாம். இதிற்கண்ட செய்திகள் நம் அறிவாற்றலுக்கு அப்பாற் பட்டு நிற்றலின் இவற்றை ஆராய்ந்து முடிவு கூறுதல் எளிதன்று. எனினும், பாண்டிவேந்தர்கள் தம் தலை நகரில் நிறுவி நடத்திவந்த தமிழ்க் கழகத்தில் அகத்தியனார் முதற் புலவராயமர்ந்து தமிழாரய்ந்தனர் என்பதும் இவர் இயற்றிய அகத்தியம் என்னும் நூல் அக்கழகத்தார்க்கு இலக்கண நூலாக இருந்தது என்பதும் நன்கு துணியப் படும். 5. அகத்தியனசின் மாணவர்கள். அகத்தியர் புலவர்களுடன் தமிழாராய்ச்சி செய்தமை யோடு மாணவர் பலர்க்கும் தமிழ் அறிவுறுத்தினர். இம் முனிவரிடத்து இயற்றமிழ் நூல் கேட்ட மாணவர் பன்னி ரூவர் ஆவர். அவர்கள், தொல்காப்பியனார், அதங்கோட் டாசான், துராலிங்கனார், செம்பூட்சேய், வையாபிகனார், வாய்ப்பியனார், பனம்பாரனார், கழாரம்பனர், அவிநயஞர்,